Home இலங்கை புத்தரின் உருவம் பொறித்த சேலையை அணிந்திருந்த பெண் சட்டத்தரணிக்கு எதிராக வழக்குப் பதிவு

புத்தரின் உருவம் பொறித்த சேலையை அணிந்திருந்த பெண் சட்டத்தரணிக்கு எதிராக வழக்குப் பதிவு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


புத்தரின் உருவம் பொறித்த சேலையை அணிந்திருந்த இளம் பெண் சட்டத்தரணிக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ; இன்று செவ்வாய்க்கிழமை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனனர்.

பெண் சட்டத்தரணிக்கு எதிரான குற்றப்பகிர்வை முன்வைக்க சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அனுமதி வழங்குமாறு காவல்துறையினர் கோரியமைக்கு அமைய ஒப்புதல் வழங்கிய நீதிமன்றம்இ வழக்கை வரும் ஜனவரி 14ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

கடந்த 12ஆம் திகதி புதன்கிழமை புத்தரின் உருவம் பொறித்த சேலை அணிந்து வந்தார் என்ற குற்றச்சாட்டில் பெண் சட்டத்தரணி ஒருவரை யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்குள் காவல்துறையினா தேடியிருந்தனர்.
காவல்துறை அவசர இலக்கமான 119இற்கு வந்த முறைப்பாட்டின் அடிப்படையில் தாம் அந்தச் சட்டத்தரணியிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவேண்டும் எனவும் அவரைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லவேண்டும் எனவும் அங்கிருந்த சட்டத்தரணிகளிடம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

எனினும் காவல்துறையினரால் தேடப்பட்ட சட்டத்தரணி நீதிமன்ற வளாகத்திலிருந்து வீடு திரும்பியிருந்தார்.

இந்த நிலையில் நீதிமன்ற வளாகத்துக்குள் மீளவும் வருகை தந்த சம்பந்தப்பட்ட பெண் சட்டத்தரணியை யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவியான ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்யுசிங்கம் யாழ்ப்பாணம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் வழங்க வைத்தார். எனினும் குறித்த பெண் சட்டத்தரணிஇ காவல்நிலையத்துக்குச் சென்றிருந்த வேளை புத்தரின் உருவம் பொறித்த சேலையை அணித்திருக்கவில்லை.

இந்தியாவிலுள்ள நண்பர் ஒருவரால் தனக்கு சேலை ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதில் புத்த பெருமானுடைய உருவம் பொறிக்கப்பட்டுள்ளது என்று தான் அறிந்திருக்கவில்லை. புத்தரை அவமதிக்கும் எண்ணத்தில் தான் அந்தச் சேலையை அணிந்திருக்கவில்லையென இளம் பெண் சட்டத்தரணி தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்தார்.

யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் இடையே எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய புத்தர் உருவம் பொறித்த சேலை அணிந்த விவகாரம் மேற்கொண்ட நடவடிக்கை எடுப்பதிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தது.

எனினும் சம்பவம் இடம்பெற்று இரண்டு நாள்களின் பின்இ அந்தப் பெண் சட்டத்தரணியை நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து பெண் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் தனது கைபேசியின் ஒளிப்படம் எடுத்த விவகாரம் பூதாகரமானது. பெண் காவல்துறை உத்தியோகத்தரின் கைபேசியை பெண் சட்டத்தரணி மிரட்டிப் பறித்தெடுத்தார் என்ற குற்றச்சாட்டு காவல்துறையினரால் முன்வைப்பட்டது.

இந்தநிலையில் காவல்துறையினரின்  இந்த அத்துமீறல் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் உறுதியாகத் தீர்மானித்தது. அதுதொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவான்இ மேல் நீதிமன்ற நீதிபதி ஆகியோரையும் யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் சந்தித்து ஆலோசனை பெற்றது.

இந்த நிலையில் பெண் சட்டத்தரணிஇ புத்தர் உருவம் பொறித்த சேலை அணிந்த வந்த விவகாரத்தை நீதிமன்றுக்கு காவல்துறையினர் கொண்டு வந்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More