Home இலங்கை புஸ்ஸல்லாவையில் இடம்பெற்ற வீதிவிபத்து காரணமாக இருவர் சுயநினைவை இழந்துள்ளனர்

புஸ்ஸல்லாவையில் இடம்பெற்ற வீதிவிபத்து காரணமாக இருவர் சுயநினைவை இழந்துள்ளனர்

by admin

புஸ்ஸல்லாவ  கண்டி நுவரெலியா பிரதான வீதியில் கல்பாலம எனும் இடத்தில் நுவரெலியாவில் இருந்து கண்டி நோக்கி பயணித்த கார் ஒன்று புஸ்ஸல்லாவ மெல்போட் தோட்டதில் இருந்து தேயிலை கொழுந்தினை ரொத்சையில்ட் தோட்ட தொழிற்சாலைக்கு கொண்டு சென்ற லொறி ஒன்றுடன் மோதியதில் காரும் லொறியும் பலத்த சேதத்திற்கு உள்ளானதுடன்  அதில் பயணித்த இருவர் சுய நினைவை இழந்து புஸ்ஸல்லாவ ஆதார வைத்தியசாலையில் இன்று (20) அனுமதிக்கபட்டுள்ளனர்.

குறித்த காரில் நான்கு பேர் பயணித்து உள்ளனர். கார் வேக கட்டுபாட்டை இழந்ததினால் இந்த விபத்து நிகழ்ந்து இருக்கலாம் என போக்குவரத்து பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

img_5225 img_5228

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More