Home இலங்கை பொய் முறைப்பாடு செய்த பெண்ணை கைது செய்ய கட்டளை

பொய் முறைப்பாடு செய்த பெண்ணை கைது செய்ய கட்டளை

by admin

பொய் முறைப்பாடு வழங்கியதுடன் , குறித்த முறைப்பாடு தொடர்பில் காவல்துறையினா் பக்க சார்பாக நடந்து கொண்டார்கள் என குற்றம் சாட்டிய பெண் , நீதிமன்றில் வழக்கு விசாரணை நடந்த போது, தனது முறைப்பாட்டை மீள பெறுவதாக மன்றில் கூறியதை அடுத்து குறித்த பெண்ணை கைது செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். 


யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகின்றார். அந்நிலையில் விவாகரத்து பெறாது , அப்பகுதியை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். 
அந்நிலையில் கடந்த  2019.04.25 ம் திகதி முச்சக்கர வண்டி சாரதி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாகவும் , தாம் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை காட்டி பணம் கேட்டு துன்புறுத்துகின்றார் எனவும் நெல்லியடி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். 


குறித்த முறைப்பாடு தொடர்பில் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் , தனது முறைப்பாட்டினை காவல்துறையினா் பக்க சார்பாக விசாரணை செய்வதாக தனக்கிருந்த அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி  காங்கேசன்துறை பிரிவிற்கு பொறுப்பான சிரேஸ்ட காவல்துறை அதிகாரியிடம் முறையிட்டார்.

 
அதனால், சிரேஸ்ட காவல்துறை அதிகாரியின் கட்டளையின்படி   நெல்லியடி காவல் நிலையத்தில் பணிபுரியும் முறைப்பாட்டு பிரிவிற்கு பொறுப்பான காவல்துறை பரிசோதகர், உப காவல்துறை பரிசோதகர், காவல்துறை சார்ஜன் மற்றும் காவல்துறை கொஸ்தாபல் ஆகியோர் இடம் மாற்றப்பட்டு அவர்களுக்கு ஒழுக்காற்ற நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

அதன் பின்னர் குறித்த முறைப்பாடு தொடர்பான வழக்கு விசாரணை பருத்தித்துறை நீதிமன்றில் நடைபெற்று வந்தது. குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , முறைப்பாட்டாளரான குறித்த பெண் நீதிமன்றில் தனக்கு பாலியல் தொல்லை இடம்பெறவில்லை என்றும் தான் தற்போது குறித்த முச்சக்கர வண்டி சாரதியுடன் ஒற்றுமையாக  வாழ்கிறேன் என விளக்கமளித்திருந்தார்.. 


இந்நிலையில் பாலியல்தொல்லை, பாலியல் ரீதியான ஒளிப்படம் எடுத்து அச்சுறுத்தியமை,  காவல்துறையினா் பக்கசார்பாக நடந்தமை போன்ற பொய் முறைப்பாடுகளை செய்தமைக்காக  அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றின் நீதிவானால் நெல்லியடி காவல்துறையினருக்கு கட்டளை இடப்பட்டது.


குறித்த பெண் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் மகளாவார். அதனூடான செல்வாக்கின் அடிப்படையிலையே காவல்துறையினருக்கு எதிராக பொய் முறைப்பாடு அளித்துகாவல்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  #பொய்முறைப்பாடு #பெண் #கைது #கட்டளை #வடமாகாணசபை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More