Home இலங்கை மகன் இயக்கிய உழவு இயந்திரத்தின் கீழ் சிக்கி தந்தை படுகாயம்!

மகன் இயக்கிய உழவு இயந்திரத்தின் கீழ் சிக்கி தந்தை படுகாயம்!

by admin

உழவு இயந்திரத்தின் கீழ் தந்தை உறங்கிக்கொண்டு இருப்பதனை அவதானிக்காது மகன் உழவு இயந்திரத்தை இயக்கியமையால் தந்தை படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலை பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

உழவு இயந்திர பெட்டியின் கீழ் தந்தை படுத்து உறங்கிக்கொண்டு இருந்துள்ளார். அதனை அவதானிக்காது மகன் உழவு இயந்திரத்தை இயக்கி அதனை வெளியில் எடுத்த போது , உழவு இயந்திர சில் கீழே படுத்திருந்த தந்தை மீது ஏறியுள்ளது.

அதில் படுகாயமடைந்த தந்தையை மீட்டு மகன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More