Home இலங்கை மக்கள் பணத்தை கையாடல் செய்தவர்கள் பாகுபாடின்றி தண்டிக்கபடுவார்கள் :

மக்கள் பணத்தை கையாடல் செய்தவர்கள் பாகுபாடின்றி தண்டிக்கபடுவார்கள் :

by admin

 

மக்கள் பணத்தை கையாடல் செய்த அனைவரும் தண்டிக்கபடுவார்கள்.  களவெடுத்தவர்கள் எனது கட்சியா , சொந்தமா என நான் பார்க்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா தெரிவித்துள்ளார்.  யாழில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பரப்புரை கூட்டம் இன்று யாழ். மாநகர சபை மைதானத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும்தெரிவிக்கையில்,
கடந்த ஆட்சி காலத்தில் எவ்வளவு மக்கள் பணம் கையாட பட்டது என்பது உங்களுக்கு தெரியும் அது தொடர்பில் விசாரணைகளை செய்வதற்கு ஆணைக்குழுக்களை நியமித்து உள்ளோம்.  மத்திய வங்கி கொள்ளை தொடர்பில் விசாரணை செய்த ஆணைக்குழு எமது அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கும் அதில் தொடர்பு உண்டு என கூறப்பட்டு உள்ளது.
எனக்கு முன்னைய அரசாங்கம்,  எனது அரசாங்கம் என எந்த வேறுபாடும் இல்லை களவெடுத்தவர்கள் தண்டிக்க படவேண்டும். களவெடுத்தவர்கள் எனது கட்சியா , சொந்தமா என நான் பார்க்க மாட்டேன்.
ஸ்ரீலங்கன் , மிஹின் லங்கா  விமான சேவையில் கோடிக்கணக்கில் கையாடல் செய்துள்ளார்கள். அந்த களவு தொடர்பில் விசாரணை செய்ய புதிய ஆணைக்குழுவை நியமித்து உள்ளேன். அதில் இருந்து யார் கள்வர்கள் என அடையாளம் காண முடியும்.  யார் தவறு செய்தாலும் அவர்கள் சட்டத்தால் தண்டிக்க படுவார்கள். நங்கள் ஒன்று பட்டு குடும்பமாக செயற்படுவோம். எமது நாட்டை கட்டி எழுப்புவோம் என மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More