Home இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக பேராசிரியர் டபிள்யு.டி.லக்ஷமன் நியமனம்…

மத்திய வங்கியின் ஆளுநராக பேராசிரியர் டபிள்யு.டி.லக்ஷமன் நியமனம்…

by admin

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக தேசமான்ய பேராசிரியர் டபிள்யு.டி.லக்ஷமன் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய வங்கியின் புதிய ஆளுநர் இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

1994ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை கொழும்பு பல்கலைகழகத்தின் உபவேந்தராக கடமையாற்றிய அவர், இலங்கையின் புகழ்பெற்ற ஒரு பொருளாதார நிபுணராவார்.

கல்வித்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக பேராசிரியர் டபிள்யு.டி.லக்ஷமன் அவர்களுக்கு 2005ஆம் ஆண்டு தேசமான்ய விருது வழங்கப்பட்டது. பேராசிரியர் டபிள்யு.டி.லக்ஷமன் இலங்கை மத்திய வங்கியின் 15வது ஆளுநராவார்.  #மத்தியவங்கி  #ஆளுநராக  #டபிள்யு.டி.லக்ஷமன் #நியமனம் #விருது 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More