Home இலங்கை மரணதண்டனைக் கைதியின் நாடாளுமன்ற சத்தியப்பிரமாணம் குறித்து, சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பி உள்ளன….

மரணதண்டனைக் கைதியின் நாடாளுமன்ற சத்தியப்பிரமாணம் குறித்து, சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பி உள்ளன….

by admin


மரணதண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்தமை தொடர்பில் சர்வதேச ஊடங்கள் விமர்சனத்துடனான செய்திகளை வெளியிட்டுள்ளன.


கொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட பிரேமலால் ஜயசேகரவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் எப்படி நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்ய முடியும் என The New York Times பத்திரிகைச் செய்தியில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.


ஆட்கொலை வழக்குடன் தொடர்புடைய இலங்கை அரசியல்வாதி ஒருவர் குற்றவாளியாகக் காணப்பட்ட நிலையில், சத்தியப்பிரமாணம் செய்வதற்காக எதிர்க்கட்சியின் கடுமையான எதிர்ப்பிற்கு மத்தியில் சிறைச்சாலையிலிருந்து நாடாளுமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டதாக The Guardian செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் என Al Jazeera செய்தி வெளியிட்டுள்ளது. #மரணதண்டனை #கைதி #சத்தியப்பிரமாணம் #பிரேமலால்ஜயசேகர #Al Jazeera

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More