Home இலங்கை மாகாணசபைகளுக்கு சொந்தமான சொத்துகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்

மாகாணசபைகளுக்கு சொந்தமான சொத்துகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்

by admin

அண்மையில் கலைக்கப்பட்டு ஆளுநரின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள மாகாணசபைகளுக்கு சொந்தமான மக்களின்  சொத்துகளை துஷ்பிரயோகம் செய்யப்படுவதை நிறுத்துவது ஆளுநர் மற்றும் மாகாணசபையின் பிரதான செயலாளர்களின் பொறுப்பாகும் என கபே அமைப்பு தெரிவித்துள்ளது

வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களுக்குச் சொந்தமான 32 க்கும் மேற்பட்ட வாகனங்கள் முன்னாள் முதலமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் எதிர்கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களின் உத்தியோகத்தர்கள் மூலம் கொண்டுசெல்லப்பட்டுள்ளது என  அமைப்பின் ; நிறைவேற்றுப்பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோனினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாணசபைகளுக்கு சொந்தமான   அதிகளவான உடமைகளை மீண்டும் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர்  அரசியல் நடவடிக்கைகளுக்காக இந்த உடமைகள் நிரந்தரமாக பயன்படுத்துவதனை  காணக்கூடியதாக உள்ளதமாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும்   மாகாணசபைகள் ஆளுநரின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதன் பின்னர், அதன் உடமைகள் அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது அரசசொத்து துஷ்பிரயோகமாகும் எனத் தெரிவித்துள்ள அ வர்  அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற நபர்களும், அவ்வாறான செயற்பாடுகளுக்கு உதவிகளை வழங்குகின்றவர்களும் இலங்கைச் சட்டத்தின் கீழ் தண்டனை கிடைக்க கூடியக் குற்றங்களுக்கு  உட்படுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More