Home பிரதான செய்திகள் மான்செஸ்டர் யுனைடட் கழக முகாமையாளர் மீது குற்றச்சாட்டு

மான்செஸ்டர் யுனைடட் கழக முகாமையாளர் மீது குற்றச்சாட்டு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஐரோப்பாவின் முதனிலை கால்பந்தாட்ட கழகங்களில் ஒன்றான மான்செஸ்டர் யுனைடட் கழக முகாமையாளர் Jose Mourinho  மீது ஒழுக்க மீறல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓல்ட் டராபெட் மைதானத்தில் வெஸ்ட் ஹாம் கழகத்திற்கு எதிராக மான்செஸ்டர் யுனைடட் கழகம் போட்டியில் பங்கேற்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தப் போட்டியின் போது இரண்டு கழகங்களும் தலா ஒரு கோலைப் பதிவு செய்து போட்டி சமனிலையில் முடிவடைந்த  நிலையில் மான்செஸ்டர் யுனைடட் கழகத்தின் முகாமையாளர் Jose Mourinho அதிருப்தியை வெளியிடும் வகையில் போத்தல் ஒன்றை காலால் உதைத்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் Jose Mourinho க்கு எதிராக சுமத்தப்பட்ட இரண்டாவது குற்றச்சாட்டு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.  ஞாயிற்றுக்கிழமையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பதிலளிப்பதற்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 1ம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒழுக்கயீனமாக நடந்துகொண்டமைக்காக Jose Mourinhoக்கு ஒரு போட்டித் தடையும் 8000 ஸ்ரேலிங் பவுண்ட்கள் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More