Home இலங்கை   மின்சாரம் தாக்கி அலுவலக  பணியாளர் உயிரிழப்பு

  மின்சாரம் தாக்கி அலுவலக  பணியாளர் உயிரிழப்பு

by admin

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் ஒருவர் அலுவகத்தில் மின்சாரம் தாக்கி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை  உயிரிழந்துள்ளார்.  சாவகச்சேரி நுணாவில் பகுதியை சேர்ந்த கஜந்தன் (வயது 26) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

அலுவகத்தில் பணியில் இருந்த வேளை , தண்ணீர் வராததால் , தண்ணீர் தொட்டியை பார்ப்பதற்காக சென்ற வேளை , அங்கிருந்த மின் வயரில் ஏற்பட்ட சேதம் காரணமாக பணியாளருக்கு மின்சாரம் தாக்கியுள்ளது.
அதனை அடுத்து அலுவகத்தில் கடமையில் இருந்த ஏனையவர்கள் இளைஞனை மீட்டு , சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி  காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More