Home இலங்கை மீத்தொட்டமுல்லை அனர்த்தத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு 3மாத கொடுப்பனவை ஒரேதடவையில் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

மீத்தொட்டமுல்லை அனர்த்தத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு 3மாத கொடுப்பனவை ஒரேதடவையில் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

by admin


மீத்தொட்டமுல்லை குப்பைமேடு சரிந்ததன் காரணமாக அனர்த்தத்திற்குள்ளான குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகளைப் பெற்றுக்கொள்வதற்காக மாதாந்தம் வழங்கப்படவுள்ள 50,000 ரூபாவை மூன்று மாதங்களுக்கும் ஒரேயடியாக அக்குடும்பங்களுக்குப் பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்துள்ளார். தற்காலிக வீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கு செலுத்தப்பட வேண்டிய முற்பணம் செலுத்தும் பிரச்சினையைத்இதன் மூலம் தீர்க்கப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பிரதேசங்களில் கழிவு முகாமைத்துவத்தை முறைப்படுத்துவது தொடர்பாக இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன் இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.

கழிவு முகாமைத்துவம் தொடர்பாக உள்ளூராட்சி நிறுவனங்கள் தயாரித்துள்ள திட்டங்களை முன்வைக்குமாறு அதிகாரிகளிடம் தெரிவித்த ஜனாதிபதி, அனைத்து மாகாண உதவி ஆணையாளர்களையும் தம்முடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும் கழிவு முகாமைத்துவம் தொடர்பாக பயிற்சி மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் வெளிநாடுகளுக்கு சென்ற அதிகாரிகள் தொடர்பாக ஒரு அறிக்கையை தமக்கு சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி சுற்றாடல் அதிகாரசபைக்கு பணிப்புரை விடுத்தார்.   மீத்தொட்டமுல்லை குப்பைமேட்டின் நிலைமை தற்போது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் இரண்டு மாதகாலப்பகுதியில் அதுதொடர்பான இறுதி முடிவுக்கு வரமுடியும் என்றும் இங்கு  கருத்துத் தெரிவித்த நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More