Home இந்தியா முருகனின் உடல்நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

முருகனின் உடல்நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

by admin


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் மத்திய சிறையில   ஜீவசமாதி அடைய உண்ணாவிரதம் இருந்து வரும் முருகனின் உடல்நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முருகனின் உறவினரான தேன்மொழி என்பவர்  உயர்நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவில்  முருகன், ஜீவசமாதி அடைய   அனுமதி கேட்டு தமிழக முதலமைச்சர், சிறைத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு மனு அளித்துள்ள நிலையில் கடந்த 18ம் தினதி முதல் உணவு உண்ணாமலும், யாரிடமும் பேசாமலும் தியானத்தில் இருந்து வருகிறார். இதனால் அவருக்கு இதுநாள் வரை அளிக்கப்பட்டு வந்த சலுகைகளை சிறை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.

அத்துடன், முருகன் ஜீவசமாதி அடைவதை சிறைத்துறை அதிகாரிகள் தடுக்கவில்லை எனவும் தான் முருகனின் மனதை மாற்ற சிறைச்சாலைக்கு சென்ற போது   முருகனை சந்திக்க தனக்கு அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் சிறை கைதிகளின் உயிரைக்காப்பாற்ற வேண்டிய கடமை சிறைத்துறை அதிகாரிகளுக்கு உள்ளது எனவும்  எனவே, முருகனை சந்திக்க தனக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும்  முருகனின் உயிரை காப்பாற்ற தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை  இன்று விசாரணைக்கு வந்துள்ள நிலையில்  அரச சட்டத்தரணி முருகனுக்கு  குளுகோஸ் ஏற்றப்பட்டுள்ளதாகவும்  முறையான மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்

இதையடுத்து, முருகனின் உடல்நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்துள்ளனர்;.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More