Home இலங்கை முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல் வெறும் நாடகம்…

முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல் வெறும் நாடகம்…

by admin


முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல் வெறும் நாடகம் என்பது தற்போது நாட்டுமக்களுக்கு தெட்டத்தெளிவாக புலனாகியுள்ளது. ரிஷாத் பதியுதீனை பாதுகாக்கும் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தந்திரமே இது. ரிஷாத் பதியுதீன் பாதுகாக்கப்பட்டதன் பின்னர் இது நிறைவுக்கு வந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பில் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாம் பல முறை அழுத்தம் கொடுத்ததாக தெரிவித்த அவர், இருப்பினும் அதை அரசாங்கம் உதாசீனம் செய்ததாக தெரிவித்துள்ளார். . பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையதாக பல குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ள ரிஷாத் பதியுதீன் அமைச்சுப்பதவியை வகிப்பது நாகரீகமற்றது. இதை அவரும் உணரவில்லை இந்த அரசாங்கமும் உணரவில்லை. இதன் தாக்கத்தை உணர்ந்த அத்துரலியே ரத்ன தேரர் உண்ணாவிரதம் இருக்கும் அளவுக்கு நிலைமை சென்றது.

தேரருக்கு ஆதரவாக பலர் குரல் கொடுக்க ஆரம்பித்ததை அடுத்து நிலைமையை சமாளிப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அரங்கேற்றப்பட்ட நாடகமே முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல். தற்போது அரங்கேற்றப்பட்ட நாடகத்தின் நோக்கம் நிறைவேறி ரிஷாத் பதியுதீன் பாதுகாக்கப்பட்டுள்ளார். ஆகவே பதவி விலகிய அமைச்சர்கள் மீண்டும் தமது பதவிகளை பொறுப்பேற்க போகின்றனர்.

தற்போது மாநாயக்க தேரர்களின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து தமது பதவிகளை மீண்டும் பொறுப்பேற்க போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இவர்கள் தமது பதவிகளை விட்டு விலகும் போது மாநாயக்க தேரர்களை கேட்டா விலகினார்கள்? எனவும் வாசுதேவநாணயக்கார கேள்வி எழுப்பி உள்ளார். #முஸ்லிம்அமைச்சர்கள் #ரிஷாத்பதியுதீன் #வாசுதேவநாணயக்கார

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More