Home உலகம் முஸ்லிம்களுக்கு எதிராக கருத்து வெளியிட்டதாக ஜெர்மன் அரசியல்வாதி மீது குற்றச்சாட்டு

முஸ்லிம்களுக்கு எதிராக கருத்து வெளியிட்டதாக ஜெர்மன் அரசியல்வாதி மீது குற்றச்சாட்டு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கருத்து வெளியிட்டதாக ஜெர்மனிய அரசியல்வாதி ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் AFD    கட்சியின் பிரதித் தலைவியான பீட்ரிக்ஸ் வொன் ஸ்டோர்ச் ( Beatrix von Storch )   ) என்ற அரசியல்வாதியே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டவராவர்.

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு டுவிட்டரில் முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்தி பதிவொன்றை இட்டிருந்தார் என இவர் மீது குற்றம் சுமத்;தப்பட்டுள்ளது. குரோத உணர்வைத் தூண்டியதாக குறித்த அரசியல்வாதிக்கு எதிராக ஜெர்மனிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முஸ்லிம் சமூகத்தை இழிவு படுத்தி வெளியிட்ட பதிவினைத் தொடர்ந்து அவரின் டுவிட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More