Home இலங்கை மூதூர் சிறுமிகள் மூவர் துஷ்பிரயோகத்துக்குட்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

மூதூர் சிறுமிகள் மூவர் துஷ்பிரயோகத்துக்குட்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

by admin

மூதூர் காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஆரம்ப பாடசாலை மாணவிகள் மூவர் துஷ்பிரயோகத்துக்குட்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

பாடசாலையின் கட்டட நிர்மாண வேலையில் ஈடுபட்டுவரும் தொழிலாளிகள் சிலர் பிரத்தியேக வகுப்புக்காகச் சென்ற குறித்த மாணவிகளை  துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாகக் தெரிவித்து பெற்றோர்களினால் செய்த முறைப்பாட்டை அடுத்தே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மூதூர் நகரில் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட  சந்தேகநபர்களை இன்றையதினம் அடையாள அணிவகுப்புக்காக  மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது குறித்த மாணவிகளால் அவர்களை அடையாளம் காட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதனைத் தொடர்ந்து   நீதிவான் அவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாணத்தில் உள்ள பல பாடசாலைகள் மூடப்பட்டதோடு  மாணவர்களும் கவயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More