Home இலங்கை ரவி ராஜ் கொலை வழக்கின் அரச தரப்பு சாட்சியாளர் விடுதலை

ரவி ராஜ் கொலை வழக்கின் அரச தரப்பு சாட்சியாளர் விடுதலை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா நடராஜா ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டு வந்த விஜயவிக்ரம மானம்பெரிகே சஞ்சய பிரிதிவிராஜ் விடுதலை  செய்யப்பட்டுள்ளார்.

இவர் அரச தரப்பு சாட்சியாளராக மாறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 39 வயதான பிரிதிவிராஜ் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் முன்னதாக கடமையாற்றியிருந்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பிரிதிவிராஜ் இந்தக் கொலை வழக்குடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக் சாட்சியமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More