Home இலங்கை ராஜபக்ஸக்கள் திருடர்கள் அல்ல – மேர்வின் சில்வா

ராஜபக்ஸக்கள் திருடர்கள் அல்ல – மேர்வின் சில்வா

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ராஜபக்ஸக்கள் திருடர்கள் அல்ல என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸக்கள் கள்வர்கள் அல்ல எனவும், அவர்கள் சொந்த சொத்துக்களை விற்று அரசியல் செய்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


தனக்கு வேட்பு மனு வழங்கப்படாத காரணத்தினால் ராஜபக்ஸக்களுடன் முரண்பாடு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கம் கடன் மற்றும் நிதி உதவிகளைப் பெற்றுக் கொண்டு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிட முடியாமல் போனதற்கு சந்திரிக்காவே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More