Home உலகம்  லிபியாவில் இருந்து அகதிகளுடன்   புறப்பட்ட படகு கவிழ்ந்து பலர் பலி!

 லிபியாவில் இருந்து அகதிகளுடன்   புறப்பட்ட படகு கவிழ்ந்து பலர் பலி!

by admin

லிபியாவின் ஜ்வரா நகரில் இருந்து அகதிகளுடன்   புறப்பட்ட படகு  திடீரென படகு நடுக்கடலில் கவிழ்ந்துள்ளது.

இதில் பயனித்த 86 அகதிகளில்  61 பேர் நீரில் மூழ்கியதாக  லிபியாவில் உள்ள சர்வதேச அகதிகளுக்கான அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. படகில் இருந்த சிலர் கடலில் குதித்து நீந்தி கரைக்கு சென்றுள்ளனர்.

இத்தாலி நாட்டின் வழியே ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகள் செல்வதற்கான முக்கிய புறப்படும் இடங்களாக லிபியா மற்றும் துனீசியா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த இரு நாடுகளில் இருந்தும் 1.53 லட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகள் இத்தாலிக்கு நடப்பு ஆண்டில் வருகை தந்துள்ளனர் என ஐ.நா. அகதிகள் முகமை தெரிவிக்கின்றது.

உலகில் மிக ஆபத்து நிறைந்த புலம்பெயர் வழிகளில் ஒன்றாக மத்திய தரைக்கடல் பகுதி நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More