Home உலகம் வடகொரிய எல்லையில் ரஷ்ய ராணுவம் குவிப்பு – கொரிய தீபகற்பத்தில் போர்பதற்றம்:-

வடகொரிய எல்லையில் ரஷ்ய ராணுவம் குவிப்பு – கொரிய தீபகற்பத்தில் போர்பதற்றம்:-

by admin

வடகொரிய எல்லையில் ரஷ்ய ராணுவத்தினர் பெருமளவு குவிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் கொரியா தீபகற்பத்தில் போர் ஏற்படும் சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா மற்றும் வடகொரியா இடையே அமைந்துள்ள ஹசன் பகுதியில் வழக்கத்துக்கு மாறாக பெருமளவு ரஷ்ய ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் சீனா, வடகொரியா மற்றும் ரஷ்ய நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் சாவோ ஜியோனாராமலைப் பகுதியிலும் ரஷ்ய ராணுவம் கடுமையான ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வடகொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே எழுந்துள்ள போர் சூழல் காரணமாக தென் கொரியாவில் அமெரிக்க ராணுவம் குவிக்கப்பட்டுள்ளமையே, ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வடகொரிய எல்லையில், ரஷ்யா ஆயுதங்களுடன், ராணுவத்தை குவித்து வருவது உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது. அது மட்டுமின்றி வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்காவின் நடவடிக்கைகளை ரஷ்யா ஒருபோதும் பார்த்துக்கொண்டு வெறுமனே இருந்து விடாது எனவும் ரஷ்யாவின் முக்கிய அதிகாரி ஒருவர் அமெரிக்காவை எச்சரித்திருந்தார்.

மேலும் அணு ஆயுத நாடுகளில் ஒன்றாக வடகொரியாவை உலக நாடுகள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அண்மைக் வலியுறுத்தி வந்தார்.

இதேவேளை ரஷ்யாவின் நடவடிக்கைகள் கொரிய தீபகற்பத்தில் அந்நாட்டை மீறி எதையும் செய்துவிட முடியாது என்ற எச்சரிக்கையை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு உணர்த்துவதாக உள்ளது என ராணுவ உயர் அதிகாரிகள் கருதுகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More