Home இலங்கை வந்தாறுமூலை வளாக நிர்வாகக் கட்டடத்தை முற்றுகையிட்டுள்ள மாணவர்களை உடனடியாக வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு

வந்தாறுமூலை வளாக நிர்வாகக் கட்டடத்தை முற்றுகையிட்டுள்ள மாணவர்களை உடனடியாக வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு

by admin

கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாக நிர்வாகக் கட்டடத்தை முற்றுகையிட்டுள்ள மாணவர்களை உடனடியாக வெளியேறுமாறு, ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் வி.தியாகேஸ்வரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, 63ஆவது நாளாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை நிர்வாகக் கட்டடத்தை முற்றுகையிட்டனர்.

இதன்காரணமாக, பல்கலைக்கழகத்தின் நிர்வாக நடவடிக்கைள் முற்றாகத் தடைப்பட்டதுடன், நிர்வாக நடவடிக்கை மேற்கொள்வதற்கான சூழல் இல்லையெனக் கோரி, கல்விசாரா ஊழியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, நிர்வாகக் கட்டத்தை முற்றுகையிட்டு, நிர்வாக நடவடிக்கைளுக்கு இடையூறு விளைவிக்கின்றனர் என, இதற்குத் தலைமை தாங்கும் 19 மாணவர்களுக்கு எதிராக ஏறாவூர் காவல்துறையில் ; முறைப்பாடு செய்யப்பட்டிருந்து.

இந்தநிலையில்  குறித்த வழக்கை விசாரணை செய்த பதில் நீதிவான்   மாணவர்கள் நிர்வாகக் கட்டடத்திலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More