Home இலங்கை வெடிபொருள் தொடர்பில் தகவல் வழங்க தவறிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது

வெடிபொருள் தொடர்பில் தகவல் வழங்க தவறிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


ஆபத்தான வெடிபொருள் தொடர்பில் தகவல் வழங்கவில்லை என ஒருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு , காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளார். வெற்றிலை கேணி பகுதியில் நீண்டகாலமாக ஆட்கள் அற்றிருந்த வீடொன்றின் காணியினை ஒருவர் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அது தொடர்பில் இராணுவத்தினருக்கு தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்ற இராணுவத்தினர் வீட்டினை சோதனையிட்டனர். அதன் போது வீட்டினுள் சந்தேகத்திற்கு இடமான எதுவும் கிடைக்கவில்லை.

பின்னர் காணியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது குண்டு போன்றதொரு மர்ம பொருள் ஒன்றினை வேலி ஓரம் கண்டு பிடித்துள்ளனர். அது தொடர்பில் அங்கு துப்பரவு பணியில் ஈடுபட்டு இருந்த பழனி என்பவரிடம் இராணுவத்தினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன் போது அவர் , தான் காணியினை துப்பரவு செய்யும் போது அந்த பொருள் காணப்பட்டதாகவும் , தான் அதனை தூக்கி வேலி ஓரமாக வீசி விட்டு தொடர்ந்து துப்பரவு பணியில் ஈடுபடுவதாகவும் , வீட்டு உரிமையாளரின் மகனே தன்னை துப்பரவு பணிக்கு அமர்த்தியதாகவும் கூறியுள்ளார்.

அதனை அடுத்து வெடி பொருள் தொடர்பில் தொடர்பில் தகவல் வழங்க தவறிய குற்றசாட்டில் அந்நபரை கைது செய்த இராணுவத்தினர் , அவரை பளை காவல்துறையினரிடம்; ஒப்படைத்தனர்.

பளை காவல்துறையினர் குறித்த நபரை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , வீட்டு உரிமையாளரின் மகனை அழைத்தும் வாக்கு மூலம் பெற்றுள்ளனர்.

#arrest #imformation

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More