Home இலங்கை வெள்ளை வானில் கடத்தப்பட்ட 11 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் – குற்றப்புலனாய்வு பிரிவினர்

வெள்ளை வானில் கடத்தப்பட்ட 11 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் – குற்றப்புலனாய்வு பிரிவினர்

by admin

கடந்த 2009 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனை அண்மித்த  பகுதிகளில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக் குற்றப்புலனாய்வு பிரிவினர்  நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

குறித்த வழக்கு நேற்றையதினம்  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குற்றப்புலனாய்வு பிரிவினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.  முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரண்ணாகொட, தனது பாதுகாப்பு உத்தியோகத்தராக  கடமையாற்றிய  சம்பத் முனசிங்கவிற்கெதிராக மேற்கொண்ட  முறைப்பாட்டைடுத்து குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து   குறித்த விடயம் தெரியவந்துள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சுமித் ரணசிங்க மற்றும் முக்கிய சாட்சியாளர்களில் ஒருவரான கடற்படை தளபதி வெகதெர ஆகியோரின் வாக்குமூலங்கள் ஊடாக இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டதாக  அவர்கள்  தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More