99
எதிர்வரும் 10ம் திகதி வரையில் மழையுடனான காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மழையுடனான காலநிலையில் மாற்றம் ஏற்படும் என தெரிவித்துள்ளது.இதேவேளை, மேற்கு, சபரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேற்கு மாகாணங்களில் தொடர்ந்தம் ஓரளவு மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
பொலனறுவை, அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் கடுமையான காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Spread the love