2021.03.20காணாமல் போனோரின் உறவினர்கள் சார்பில் குழு ஒன்றினை...
-
நாட்டில் நடைமுறையில் உள்ள கொரோனா சுகாதார விதிகளை மீறி னாரா என்பது தொடர்பாக நோர்வே பிரதமர் எர்னா சொல்பேர்க்கிடம்( Erna Solberg) அந்நாட்டுப் பொலீஸார் விசா ரணை நடத்த உள்ளனர்.
தனது இல்லத்திலும் உணவகம் ஒன்றி லும் பத்துக்கு மேற்பட்டோரை ஒன்று கூட்டி விருந்துபசாரம் நடத்தினார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை பத்திரி கைகள் வெளியிட்டதை அடுத்தே அவரி டம் அது குறித்து விசாரணநடத்தப்படும் என்று பொலீஸார் அறிவித்துள்ளனர்.
கடந்த மாதம் இறுதியில் பிரதமர் தனது அறுபதாவது பிறந்த நாளைக் கொண் டாடினார். அச்சமயத்தில் ஒருமுறை வீட்டிலும், மற்றொரு தடவை உணவகத் திலுமாக தனது உறவினர்களோடு இரண்டு விருந்துகளை ஏற்பாடு செய்தார் என்று கூறப்படுகிறது.
உணவகத்தில் 13 பேர் பங்குபற்றிய விருந்தில் பிரதமர் கலந்துகொள்ள வில்லை.வாடகைக்கு அமர்த்தப்பட்ட வீட்டில் ஜப்பானிய சுஷி(sushi) உணவு பரிமாறப்பட்ட மற்றைய இரவு விருந்து பசாரத்தில் அவரது உறவினர்கள் 14 பேர் உணவருந்தினர்.
நோர்வேயில் பொதுவாக பொது இடங்களிலும் வீடுகளிலும் பத்துக்கு மேற்பட்டவர்கள் ஒன்று கூடி உணவு அருந்துவது போன்ற நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன. அத்தகைய சுகாதார விதிகளை நாட்டின் பிரதமர் மீறி விட்டாரா என்பது தொடர்பாகவே
பொலீஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட் டுள்ளது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக பிரதமர் தனது முகநூலில் மன்னிப்புக் கோரும் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
படம் :பிரதமர் எர்னா சொல்(Erna Solberg)தகவல் :Aftenposten பத்திரிகை.
குமாரதாஸன். பாரிஸ்.
20-03-2021{{retweet_count}}{{favorite_count}} -
சுகாதார அதிகார சபை திடீர் முடிவு!
பிரான்ஸில் சுகாதார விடயங்களில் முக்கிய தீர்மானங்களை எடுக்கும் உயர் அதிகார சபை(Haute autorité de santé) இன்று வெளியிட்டிருக்கின்ற சிபாரிசு ஒன்றில் அஸ்ராஸெனகா தடுப்பூசி 55வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரமாக முன்னெடுக்குமாறு அரசைக் கேட்டிருக்கும் சுகாதார அதிகாரசபை அஸ்ராஸெனகா தடுப்பூசிக்கு வயது வரம்பை அறிவித்துள்ளது.
ஜரோப்பாவில் அஸ்ராஸெனகா தடுப்பூசி ஏற்றியோரில் இரத்தம் உறைதல் மற்றும் முளையில் இரத்தக் கட்டி போன்ற கடுமையான விளைவுகளைச் சந்தித் தவர்கள் அனைவருமே 55வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். இதனை அடுத்தே இவ்வாறு வயது வரம்பு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இரத்தக் கட்டிகள் உட்பட கடுமையான பக்க விளைவுகளை அடுத்து ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இடைநிறுத்தப்பட்ட அஸ்ராஸெனகா தடுப்பூசிப் பயன்பாடு மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் இன்று(வெள்ளி) மாலை தொடக்கம் தடுப்பூசி ஏற்றும் பணி மீண்டும் தொடங் கியுள்ளது.
அஸ்ராஸெனகா தடுப்பூசி மீது மக்கள் இழந்த நம்பிக்கையை மீள ஏற்படுத்துவ தற்காக நாட்டின் பிரதமர் இன்று தனக்கு தடுப்பூசி ஏற்றிக் கொண்டார். அவர் அதனை ஏற்றிக்கொள்வதற்குச் சிறிது நேரத்துக்கு முன்பாகவே சுகாதார அதிகார சபை தனது இந்த முடிவை வெளியிட்டது.
பிரான்ஸில் இதுவரை 55வயதுக்கு குறைந்தவர்களுக்கும் அஸ்ராஸெனகா தடுப்பூசி ஏற்றப்பட்டுவந்தது குறிப்பிடத் தக்கது.
தடுப்பூசி "பாதுகாப்பானது செயல்திறன் மிக்கது" என்று ஜரோப்பிய ஒன்றியத் தின் மருந்துகள் நிறுவனம் மீண்டும் உத்தரவாதம் வழங்கியுள்ள போதிலும் நாட்டின் 50 சதவீதத்துக்கு மேற்பட்டோர் அஸ்ராஸெனகா தடுப்பூசி குறித்து அவ நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று கரு த்துக்கணிப்பு வெளியாகி உள்ளது.(படம் :55 வயதான பிரதமர் Jean Castex இராணுவ மருத்துவமனை ஒன்றில் அஸ்ராஸெனகா தடுப்பூசி ஏற்றிக் கொண்ட காட்சி)
குமாரதாஸன். பாரிஸ்.
19-03-2021. வெள்ளிக்கிழமை.{{retweet_count}}{{favorite_count}} -
பாரிஸ் பிராந்தியம் உட்பட 16 மாவட் டங்களில் இன்று நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வருகின்ற பொது முடக்கக் கட்டுப்பாடுகள் காரணமாக சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வர்த்தக நிலை யங்கள் மூடப்படவுள்ளன.அத்தியாவசியமற்ற கடைகள் மூடப்படு கின்ற போதிலும் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் வழமை போன்று திறந்து இயங்க முடியும் என்று அரசாங்கப் பேச் சாளர் கப்ரியேல் அட்டால் தெரிவித்திருக் கிறார்.கடந்த பொது முடக்க காலங்களில் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் மூடப்பட்டு வந்தன. இம்முறை அவற்றை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
புத்தகக் கடைகள் அத்தியாவசிய வர்த்தக நடவடிக்கைகளோடு சேர்க்கப்பட்டிருப்ப தால் அவற்றையும் திறக்க முடியும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை விட முன்னர் மூடப்படும் பட்டியலில் இடம் பெற்றுவந்த பல வர்த்தக நிலையங்கள் இந்தத் தடவை திறப்பதற்கு அனுமதிக் கப்பட்டுள்ளன.
நான்கு வாரங்கள் நீடிக்கவுள்ள பொது முடக்க காலப்பகுதியில் திறந்து இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகின்ற
வர்த்தக நடவடிக்கைகளின் விவரம் வருமாறு :
*les garages automobiles(வாகனம் கழுவும் இடங்கள்)
*les vendeurs et réparateurs de vélos (சைக்கிள் விற்பனை மற்றும் திருத்தும் இடம்)
*les loueurs de voitures(கார் வாடகைக்கு வழங்கும் நிலையங்கள்)
*les stations-service(வாகன தரிப்பிட சேவைகள்)
*les magasins de bricolage et les quincailleries
*les supérettes, supermarchés et hypermarchés( சுப்பமார்க்கற், ஹிப்பர் மார்க்கற்)
*les magasins de produits surgelés(உறை குளிர் உணவு விற்பனை நிலையங்கள்)
*les magasins de fruits et légumes(பழங்கள், மரக்கறி கடைகள்)
*les magasins de produits pour animaux (வளர்ப்பு பிராணிகளுக்கான உணவுக் கடைகள்)
*les magasins de fournitures agricoles
*les boucheries-charcuteries et les poissonneries(இறைச்சி, மீன் கடைகள்)
*les boulangeries-pâtisseries et les confiseurs(பேக்கறிகள்)
*les vendeurs et réparateurs d'ordinateurs et de matériel de télécommunications(கணனி மற்றும் தொலைத்தொடர்பு, தொடர்பாடல் கருவிகள் விற்பனை நிலையம்)
*les bureaux de tabac et les vendeurs de cigarettes électroniques(எலக்ரோனிக் சிகரெட் விற்பனை, Tabac)
*les banques et les assurances(வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள்)
*les services funéraires(இறுதிச் சடங்கு, அந்திமகால சேவைகள்)
*les blanchisseries-teintureries(சலவை மற்றும் அயனிங் நிலையங்கள்)
*les magasins de textiles(புடைவை விற்பனை)
*les libraires et les disquaires(புத்தகம் இறுவட்டு விற்பனை)
*les vendeurs de journaux et de papeterie(பத்திரிகை மற்றும் காகிதாதிகள் விற்பனை நிலையம்)
*les salons de coiffure(சிகையலங்கரிப்பு நிலையங்கள்)
*les opticiens(மூக்குக் கண்ணாடிக் கடைகள்)
*les pharmaciesles vendeurs d'articles médicaux et orthopédiques(மருந்தகங்கள் மற்றும் மருத்துவ பொருள்கள் விற்பனை)
குமாரதாஸன். பாரிஸ்.
19-03-2021{{retweet_count}}{{favorite_count}} -
இங்கிலாந்து-சுவீடன் கூட்டுத் தயாரிப் பாகிய 'அஸ்ராஸெனகா' வைரஸ் தடுப்பூசி "பாதுகாப்பானது, செயல்திறன் மிக்கது" என்று ஐரோப்பிய ஒன்றியத் தின் மருந்துகள் நிறுவனம் (European Medicines Agency - EMA)மீண்டும் உத்தர வாதம் வழங்கி உள்ளது.
இதனை அடுத்து அந்த தடுப்பூசியை இடைநிறுத்தி வைத்திருந்த பல நாடுகள் அதன் பாவனையை மீண்டும் ஆரம்பிக் கின்றன.அஸ்ராஸெனகா தடுப்பூசி இரத்தம் உறைதல், மூளையில் இரத்தக் கட்டி போன்ற பக்க அறிகுறிகளுக்குக் காரணமாகின்றது என்ற அச்சம் எழுந்ததை அடுத்து இருபதுக்கு மேற்பட்ட ஐரோப்பிய நாடுகள் அதன் பாவனையை இடைநிறுத்தி வைத்திருந்தன.
பிரான்ஸும் ஐரோப்பிய ஒன்றிய மருந்துகள் நிறுவனத்தின் மறு ஆய்வு அறிக்கை வரும் வரை தனது மக்களுக்கு
தடுப்பூசி ஏற்றுவதை நிறுத்தியிருந்தது.
ஜரோப்பாவில் சுமார் இருபது மில்லியன் பேருக்கு அஸ்ராஸெனகா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. அதில் உடல் இரத்தக் கட்டிகளால் ஆக ஏழு பேரும், மூளை இரத்தக் கட்டிகளால் 18 பேரும் மாத்திரமே
பாதிக்கப்பட்டனர். இரத்தக் கட்டிகளுக் கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இருப்பது நிரூபிக்கப்படவில்லை-என்று ஐரோப்பிய
மருந்துகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
"தடுப்பூசியின் நன்மைகள் அதன் ஆபத்தைவிட அதிகம்" என்று ஐரோப்பிய ஒன்றிய மருந்துகள் நிறுவனத்தின் ஆய்வுக் குழு நிபுணர் டாக்டர் ஸ்ட்ராஸ் (Dr. Straus ) தெரிவித்திருக்கிறார்.
பிரான்ஸில் அஸ்ராஸெனகா ஊசி போடும் பணி இன்று வெள்ளிக்கிழமை மீள ஆரம்பமாகிறது. நாட்டின் பிரதமர்
தனக்கான தடுப்பூசியை இன்று பெற்றுக் கொள்ளவுள்ளார் என்று செய்தி வெளி யாகி இருக்கிறது.
55 வயதான பிரதமர் தனது வயது வரம் பின் அடிப்படையில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கு இன்னமும் காத்திருக்க வேண்டும். ஆனால் தடுப்பூசி மீது நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை
ஏற்படுத்துவதற்காகவும், அஸ்ராஸெ னகா பற்றிய அச்சத்தை அகற்றுவதற் காகவும் பிரதமர் விதிவிலக்காக முன்கூட்டியே ஊசி ஏற்றிக் கொள்கிறார்.
இதனை தொலைக்காட்சிப் பேட்டி ஒன் றில் அவரே வெளியிட்டிருந்தார். பிரதமரைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றும் அஸ்ரா ஸெனகா தடுப்பூசி ஏற்றிக் கொள்ள முன்வந்துள்ளது. ஒரு மருத்துவ நிபுணராகிய சுகாதார
அமைச்சர் ஒலிவியே வேரன் ஏற்கனவே அஸ்ராஸெனகா தடுப்பூசியை ஏற்றிக் கொண்டுள்ளார்.அஸ்ராஸெனகா தடுப்பூசிப் பாவனை நிறுத்தப்பட்டால் அது ஜரோப்பாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை களைப் பெரிய அளவில் பாதிக்கும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. அதன் பாவனையை நிறுத்தாமல் தொடர்ந்து முன்னெடுக்குமாறு உலக சுகாதார நிறுவனமும் நாடுகளைக் கேட்டிருக் கிறது.
குமாரதாஸன். பாரிஸ்.
19-03-2021{{retweet_count}}{{favorite_count}} -
நெதர்லாந்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் முடிவுகள் வெளியாகி வருகின்றன. 150 ஆசனங்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபைக்கு சுமார் 37 கட்சிகள் போட்டியிட்ட தேர்தலில் வாக்குகள் சிதறுண்டுள்ளன.
பிரதமர் மார்க் ருட்டேயின் (Mark Rutte) லிபரல் கட்சி (VVD) 36 ஆசனங்களை வென்று முன்ன ணியில் உள்ளது.மார்க் ருட்டேயின் கொள்கைகளை எதிர்த்துவருகின்ற அவரது கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான ஐரோப்பிய ஒன்றிய சார்பு ஜனநாயகக் கட்சி (Democrats 66)24 இடங்களில் வென்று குறிப்பிடத்தக்க முக்கிய வெற்றியைப் பெற்றுள்ளது.
குடியேற்றவாசிகளுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட தீவிர வலது சாரிக் கட்சி (far-right PVV) 17 ஆசனங்களை வென்று மூன்றாம் நிலையில் உள்ளது. கொரோனா வைரஸ் நெருக்கடிக்குப் பின்னர் நடைபெறுகின்ற இத் தேர்தலில்எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக தீவிர வலதுசாரிக்கட்சி பின்தள்ளப்பட்டுள்ளது.
பிரதான இடதுசாரிக் கட்சியும் தோல்வி அடைந்துள்ளது. மார்க் ருட்டேயின் அரசாங்கம் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் கொரோனா வைரஸ் முகாமைத்துவம் தொடர்பாக மக்கள் மத்தியில் எழுந்த அதிருப்திகள் தேர்தலில் தீவீர வலதுசாரிகளுக்கு வாய்ப்பாக மாறும் என்ற கணிப்புகள் தவறி உள்ளன.
சுமார் பத்து ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் நீடித்து வருபவர் பிரதமர் மார்க் றுட்டே. தற்போதைய பெறுபேறுகள் அவரது கூட்டணி நான்காவது தவணைக் காலத்துக்கும் ஆட்சியில் நீடிப்பதற்கு வாய்ப்பளித்துள்ளது.வைரஸ் நெருக்கடியைக் கையாண்ட அரசாங்கத்தின் மீதான மக்களது கருத்துக்கணிப்பாக பார்க்கப்படும் இத்தேர்தலில் பிரதமர் ருட்டின் கூட்டணிக்கு - அதன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும்- நெதர்லாந்து மக்கள் மற்றொரு சந்தர்ப்பத்தை வழங்கி உள்ளனர்.
குழந்தைகள் நல நிதிய உதவிப் பணம் பெற்ற ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மீது தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அந்தப் பணம் மீளப்பெறப்படுவதற்குக் காரணமாக அமைந்த அரசின் முறைகேட்டுக்குப் பொறுப் பேற்று பிரதமர் மார்க் ருட்டின் அரசாங்கம் கடந்த ஜனவரியில் பதவி விலகி இருந்தது தெரிந்ததே.
கொரோனா வைரஸ் காரணமாக தேர்தல் வாக்களிப்பு மூன்று தினங்கள் நடத்தப் பட்டது. தொற்றுக் காரணமாக நெதர்லாந்தில் இதுவரை 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
*முதல் படம் :பிரதமர் மார்க் ருட். *இரண்டாவது படம் : தேர்தலில் மிக முக்கிய வெற்றியை ஈட்டிய Democrats 66 கட்சியின் தலைவி மேசை மீது ஏறிக் குதூகலித்த காட்சி. #நெதர்லாந்து #பொதுத்தேர்தல் #பிரதமர் #வெற்றி #தீவிர_வலதுசாரிகள்
---------------------------------------------------------------
-குமாரதாஸன். பாரிஸ்18-03-2021
{{retweet_count}}{{favorite_count}} -
ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவின் ஜனாதிபதி ஜோன் மகுபலி (John Magufuli) கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
61 வயதுடைய அவர் உடல் நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் அதனால் அவர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டுத் துணை ஜனாதிபதி அறிவித்துள்ளார். #John_Magufuli #தான்சானியா #கொரோனா
{{retweet_count}}{{favorite_count}} -
நாட்டில் உணவகங்கள், அருந்தகங்களை படிப்படியாக மூன்று கட்டங்களில் திறப்ப தற்கு உரிமையாளர்களுடன் அரசு கலந்தாலோசித்து வருகிறது. திகதிகள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.
நான்கு வாரகால இடைவெளிகளைக் கொண்ட அந்த மூன்று கட்டங்களுக்கு மான நேர அட்டவணை, தொற்று வீதம், தடுப்பூசி ஏற்றப்பட்டோரின் எண்ணிக்கை என்பனவற்றை நிபந்தனையாகக் கொண்டே தீர்மானிக்கப்படும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கி றது.
நீண்டகாலமாக முடங்கிப் போய் உள்ள உணவகத் துறையை மீள இயக்கி வழமைக்குக் கொண்டுவருவது பற்றி உணவகங்கள், மற்றும் ஹொட்டேல், உணவு சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் அமைச்சர்களுக்கும் இடையே பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன.
ஹொட்டேல்கள், மற்றும் அரச தனியார் பணிமனைகளில் பலர் ஒன்றாகக்கூடி உணவு அருந்துகின்ற இடங்களையும் அங்குள்ள அருந்தகங்களையும் முதலில் திறப்பதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது.(les salles des hôtels pour y prendre petit déjeuner et dîner.)
இரண்டாவது கட்டமாக சகல உணவகங்க ளையும் (restaurants) அருந்தகங்களையும் (Bars) அவற்றின் வெளி இருக்கைகளை (terraces) முழுமையாகவும் உள்ளே உணவு அருந்தும் இடங்களை அரைவா சியாக ஐம்பது வீதமும் திறந்து இயங்க அனுமதிப்பது என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது. (la deuxième étape permettrait de retrouver les terrasses des restaurants et des bars, ainsi que les salles en intérieur à 50% de leur capacité.)
மூன்றாவது இறுதிக் கட்டத்தில் உணவ கங்கள் அருந்தகங்கள் அனைத்தையும் கண்டிப்பான சுகாதார விதிகளுடன் முழு அளவில் இயங்க அனுமதிப்பது. (La troisième et dernière phase serait une réouverture totale, avec application du protocole renforcé mis en place en octobre 2020 : distance entre les tables, pas plus de six à table, masques et gel hydroalcoolique)
சகல பிரஜைகளுக்கும் அரசு விரைவில் அறிமுகப்படுத்த இருக்கும் சுகாதார "கியூஆர் கோட்" (QR Code) பரிசோதனை உணவகங்கள், அருந்தகங்களின் வாயில்களில் கட்டாயமாக்கப்படவுள் ளது என்றும் கூறப்படுகிறது.
வைரஸ் தொற்றும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ள இடங்களின் பட்டியலில் முதலிடத்தில் உணவகங்கள், அருந்த கங்கள், உள்ளக விளையாட்டு அரங்கு கள் என்பன உள்ளன. இதனை சுகாதார அறிவியல் நிபுணர்கள் குழு மீண்டும் சுட்டிக்காட்டி உள்ளது.
எனவே உணவகங்களைத் திறப்பது பெரும்பாலும் நாடு சுகாதார நெருக்கடி யில் இருந்து விடுபடுகின்ற கடைசிக் கட்டத்திலேயே நிகழ வாய்ப்புண்டு என்று தெரிவிக்கப்படுகிறது.(அடைப்புக் குறிகளுக்குள் உள்ளவை பிரெஞ்சு மொழி வாக்கியங்கள்)
குமாரதாஸன். பாரிஸ்.
17-03-2021{{retweet_count}}{{favorite_count}} -
தென்மேற்கு சீனாவில் 4 கிலோ மீற்றர் கொண்ட குறைந்த அளவு பகுதிக்குள் இதற்கு முன்பு அறியப்படாத 24 வகையான வௌவால் கொரோனா வைரஸ்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
சீனாவில் வௌவால் வைரசுகள் பற்றி ஷான்டோங் மருத்துவ பல்கலை கழகத்தின் பேராசிரியர் ஷி வெய்போங் என்பவர் தலைமையில் அண்மையில் ஆய்வு நடத்தப்பட்டது.
அவற்றில் 4 வைரஸ்கள் உலக நாடுகளில் பெருந்தொற்றை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸுடன் தொடர்புடையவை என்றும் அவற்றில் ஒரு வைரஸானது கொரோனா வைரஸின் மரபணுவை சுமந்திருந்தது என்பதும் அந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
{{retweet_count}}{{favorite_count}} -
பக்க விளைவுகள் தொடர்பான மேலதிக ஆய்வு முடிவுகள் வரும்வரை அஸ்ரா ஸெனகா வைரஸ் தடுப்பூசிப் பாவனையைப் பல ஐரோப்பிய நாடுகள் இடைநிறுத்தி உள்ளன.
நெதர்லாந்தை அடுத்து ஜேர்மனியும் அஸ்ராஸெனகா தடுப்பூசி ஏற்றுவதை இடைநிறுத்துவதாக இன்று அறிவித் துள்ளது. நோர்வே, டென்மார்க், ஐரிஷ் குடியரசு, பல்கேரியா ஆகியன ஏற்கனவே தமது மக்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதை சிறிது காலம் இடைநிறுத்தி உள்ளன.
இத்தாலி, ஒஸ்ரியா போன்ற நாடுகள் அஸ்ராஸெனகா தடுப்பூசியின் ஒரு குறிக்கப்பட்ட தயாரிப்புகளின் பாவனையை மட்டும் நிறுத்தி வைத் துள்ளன.
இந்தோனேசியா, தாய்லாந்துஆகியனவும் அஸ்ராஸெனகா ஊசி ஏற்றுவதை தள்ளிப்போட்டுள்ளன. தடுப்பூசி ஏற்றியோரில் அரிதாக மிகச் சிலரில் இரத்தம் உறைதல்(blood clot) தோலில் இரத்தக் கசிவு போன்ற பக்க விளைவுகள் வெளிப்பட்டதை அடுத்தே நாடுகள் பலவும் அஸ்ராஸெனகா தடுப்பூசியை இடைநிறுத்தி வருகின்றன.
ஜரோப்பாவிலும் ஐக்கிய ராஜ்ஜியத்திலும் இதுவரை 17 மில்லியன் பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது என்றும், அவர்களில் ஆக நாற்பது பேர் மட்டுமே பக்க விளைவுகளைச் சந்தித்துள்ளனர் எனவும் அஸ்ராஸெனகா தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரத்தம் உறைதலுக்கும் தடுப்பூசி மருந்துக்கும் தொடர்பு இருப்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. 'அஸ்ராஸெனகா' தடுப்பூசிப் பாவனையை நிறுத்துவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
பிரான்ஸில் 'ஒக்ஸ்போட்' தயாரிப்பான அஸ்ராஸெனகா தடுப்பூசி அனுமதிக்கப்பட்ட ஐந்து கொரோனா தடுப்பு மருந்துகளில் ஒன்றாகப் பாவனையில் இருந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து பயன்படுத்துவதா என்ற தீர்மானத்தை அடுத்த 24 மணிநேரத்தில் பிரான்ஸின் சுகாதார அதிகாரிகள் முடிவு செய்யவுள்ளனர். #ஜேர்மனி #நெதர்லாந்து #அஸ்ராஸெனகா #இடைநிறுத்தம் #பக்கவிளைவுகள் #கொரோனா
----------------------------------------------------------------
குமாரதாஸன். பாரிஸ்.15-03-2021
{{retweet_count}}{{favorite_count}} -
மியன்மாரில் ராணுவத்துக்கு எதிராக யாங்கூன் பகுதியில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 38 பேர் பலியாகியுள்ளனா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது
மேலும் சீன தூதர அதிகாரிகள் உட்பட பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மியன்மார் போராட்டத்தில் 80க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மியன்மாரில் ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளதுடன் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மைன்ட் உள்பட 100-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து நாட்டில் ஜனநாயகம் மீட்கப்பட வேண்டும் எனக் கோரி கடந்த சில வாரங்களாக அந்த நாட்டு மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது #மியன்மார் #போராட்டக்காரா்கள் #சுட்டுக்கொலை #ராணுவ_ஆட்சி #ஆங்சான்சூகி
{{retweet_count}}{{favorite_count}} -
கூரிய ஆயுதத்தால் தாக்குவதற்கு எத்தனித்த நபர் ஒருவரை காவற்துறை உத்தியோகத்தர் தற்பாதுகாப்புக்காக தனது துப்பாக்கியால் சுட்டார். இதனால் அந்த நபர் உயிரிழந்தார். பாரிஸ் 18 ஆம் நிர்வாகப் பிரிவில் இன்று முற்பகல்வேளை இச்சம்பவம் இடம் பெற்றதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் நடந்த பகுதி உடனடியாக மூடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்த ப்பட்டது. உள்ளே செல்ல எவரும் அனுமதிக்கப்படவில்லை. சம்பவம்
மதம் மற்றும் பயங்கரவாத நோக்கம் கொண்ட தாக்குதல் அல்ல என்பது தெரிவதாக முற்கொண்டு வெளியான செய்திகள் தெரிவித்தன.
ஊடகங்களின் தகவல்களின் படி, சைக்கிளில் ரோந்து சென்ற காவற்துறை உத்தியோகத்தர்கள் மூவர் தெருவில் குடும்பத் தகராறு ஒன்றில் தலையீடு செய்த சமயமே இந்தத் தாக்குதல் முயற்சி இடம்பெற்றது என்பது தெரிய வருகிறது.
குடும்பத் தகராறை விசாரிப்பதற்கு காவற்துறை உத்தியோகத்தர்களில் இருவர் சென்றசமயம் அவர்களது சைக்கிளுடன் மற்றைய உத்தியோகத்தர் தனித்து நின்ற வேளை நபர் ஒருவர் அவரை நெருங்கி கத்தியால் தாக்க முற்பட்டார். காவற்துறை உத்தியோகத்தர் தனது குண்டாந்தடியால் அந்த நபரைத் தாக்கித் தடுக்க முற்படவே அவர் தப்பி ஓடினார்.
அவரைத் தூரத்திச் சென்ற காவற்துறை உத்தியோகத்தர் மீது அந்த நபர் மறுபடியும் கத்தியால் தாக்க முற்படவே அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது.
மூன்று குண்டுகள் பாய்ந்ததில் அந்த நபர் தரையில் சாய்ந்து வீழ்ந்துள்ளார். அவசர முதலுதவிப் பிரிவினர் அழைக்கப்பட்ட போதும் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
இவ்வாறு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.பாரிஸ் 18 ஆம் நிர்வாக வட்டகையில் (18e arrondissement) rues Boinod, Championnet, Poissonnière தெருக்கள் சந்திக்கும் இடத்தில் வைத்தே அந்த நபர் சுடப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக IGPN பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குமாரதாஸன். பாரிஸ்.
14-03-2021{{retweet_count}}{{favorite_count}} -
பாடசாலைகள், உணவகங்கள் பூட்டு!
புதிய தொற்று அலை காரணமாக இத்தாலி நாட்டின் பெரும் பகுதிகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் முடக்கப்படுகின்றன.
ஓராண்டு காலத்துக்குப்பிறகு நாடு மீண்டும் ஒரு பெரும் தொற்று அலையைச் சந்திப்பதாக பிரதமர் மரியோ ட்ராகி (Mario Draghi) தெரிவித்திருக்கிறார். அதனை எதிர்கொள்வதற்கான புதிய கட்டுப்பாடு களை அவர் இன்று வெளியிட்டிருக் கிறார்.
கடந்த ஆண்டு பெப்ரவரி-மார்ச்சில் வைரஸ் முதல் அலையாகத் தொற்றத் தொடங்கிய போது முதலில் முடக்கப்பட்ட ஐரோப்பிய நாடு இத்தாலி ஆகும். ஐரோப்பாவில் அதி கூடிய எண்ணிக் கையாக இதுவரை ஒரு லட்சம் பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.
பிரதமர் இன்று அறிவித்துள்ள கட்டுப்பாடுகளின் படி வாராந்தம் 250 தொற்றுக்கள் ஏற்படும் பகுதிகள் சிவப்பு வலயங்கள் என்ற பிரிவினுள் அடக்கப்பட்டு அங்கு பொது முடக்கக் கட்டுப்பாடுகள் கண்டிப்பான முறையில் கடைப்பிடிக்கப்படவேண்டும்.
மார்ச் 15 முதல் ஏப்ரல் 6வரை இந்தக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும். சிவப்பு வலயங்களில் பாடசாலை கள், பல்கலைக்கழகங்கள் உணவகங்கள், அருந்தகங்கள் போன்றன மூடப்படவேண் டும்.
இதற்கு மேலதிகமாக ஈஸ்டர் விடு முறையை முன்னிட்டு வரும் ஏப்ரல் 3,4,5 ஆகிய தினங்கள் நாடு முழுவதும் சிவப்பு வலயமாக்கப்பட்டு முடக்கப்படவுள்ளது.படம் :இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி (Mario Draghi).
குமாரதாஸன். பாரிஸ்.
13-03-2021{{retweet_count}}{{favorite_count}} -
காவல்துறை அதிகாரி ஒருவரால் கடத்தப் பட்டுக் கொல்லப்பட்டார் எனச் சந்தேகிக்கப்படுகின்ற யுவதி ஒருவரின் உருக்குலைந்த உடலை லண்டன் பெருநகரப் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
33வயதான சாரா எவரார்ட்(Sarah Everard) என்ற யுவதியின் உடலே கென்ற்(Kent) வூட்லான்ட் (woodland) பகுதியில் மீட்கப் பட்டிருக்கிறது. சந்தைப்படுத்தல் நிறைவேற்று அதிகாரியான அவர் கடந்த மூன்றாம் திகதி தெற்கு லண்டனில் Clapham தெருவில் தனியே நடந்து சென்ற பின்னர் காணாமற்போயிருந்தார்.
கடந்த பத்துத் தினங்களுக்கு மேலாக பல காவல்துறைக் குழுக்கள் அவரைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தன.யுவதி சாரா காணாமற்போனமை தொடர்பாக லண்டன் பெருநகர காவல்துறை (Metropolitan Police) அதிகாரி ஒருவர் ஏற்கனவே சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
நாடாளுமன்றம், பிரதமர் அலுவலகம் மற்றும் ராஜதந்திரிகளது இடங்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் பிரிவைச் சேர்ந்த (Parliamentary and Diplomatic Protection Command) 48 வயதான Wayne Couzens என்ற அந்த அதிகாரி தடுத்துவைக்கப் பட்டிருந்த அறையில் தலையில் காயத்துடன் சுயநினைவிழந்து காணப்பட்டதை அடுத்து நேற்றிரவு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்தார்.
செல்வி சாராவைக் கடத்திச் சென்று கொன்றிருக்கலாம் எனச் சந்தேகிக் கப்படுகின்ற பிரஸ்தாப அதிகாரி மீது மற்றொரு பெண்ணுடன் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டமை தொடர்பான முறைப்பாடு ஒன்றும் கடந்த மாதம் பதிவாகி இருந்தது என்று கூறப்படுகிறது.
அந்த முறைப்பாட்டை லண்டன் பெருநகர காவல்துறையினா் கையாண்ட விதம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.அது தொடர்பாக காவல்துறை சுயாதீனப் பிரிவு அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கண்காணிப்பு மிகுந்த லண்டன் தெரு ஒன்றில் காணாமற்போன யுவதியை எப்படியும் கண்டுபிடித்து விட முடியும் என்று காவல்துறையினா் நம்பிக்கை வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் அவரது உடல் பாகங்களாக மீட்கப்பட்டி ருப்பது பொது மக்களிடையே பலத்த அதிர்வலைகளை உண்டாக்கி உள்ளது.
"இந்தச் செய்தி நகர மக்களிடையே எந்தளவு அதிர்ச்சியையும் கவலையை யும் ஏற்படுத்தி உள்ளது என்பதை நான் அறிவேன்" என்று லண்டன் மேயர் சாதீக் ஹான் (Sadiq Khan) குறிப்பிட்டுள்ளார்.பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கொல்லப் பட்ட யுவதியின் குடும்பத்தினருக்குத் தனது அனுதாபத்தைத் தெரிவித்திருக் கிறார். #லண்டனில் #காணாமற்போன #யுவதி #மீட்பு #கைது #Sarah_Everard #காவல்துறை_அதிகாரி
------------------------------------------------------------------
குமாரதாஸன். பாரிஸ்.12-03-2021
{{retweet_count}}{{favorite_count}} -
உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் இறக்கும் அபாயம் உள்ளது எனவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க தவறினால் தீவிர பசி மற்றும் மரணத்தின் விளிம்பை அடைவார்கள் எனவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
உணவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போது ஐக்கிய நாடுகள் சபை தலைவர் அண்டோனியா குட்டரஸ் இதனைத் தொிவித்துள்ளாா்.
கொரோனா மற்றும் கால நிலை மாற்றம் வறுமையை தீவிரப்படுத்தியுள்ளது. நீங்கள் மக்களுக்கு உணவளிக்கவில்லை என்றால் மோதலை உருவாக்குகிறீர்கள் என்று அர்த்தம். பஞ்சமும், பசியும் உணவு இல்லாததால் ஏற்படவில்லை எனவும் அவை மனிதனால் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகின்றன” எனவும் அவா் தொிவித்துள்ளாா். #பஞ்சம் #பசி #பட்டினி #அபாயம் #ஐக்கியநாடுகள்சபை #கொரோனா
{{retweet_count}}{{favorite_count}} -
தேசியவாதத் தலைவி மரின் லு பென்
குடியேற்றவாசிகளை நான் எதிர்க்க வில்லை. வெளிநாட்டவர்கள் மீது அச்சமோ வெறுப்போ கிடையாது. ஆனால் குடியேற்றம் நாட்டுக்குப் பெரும் கெடுதலை ஏற்படுத்துகிறது. பிரான்ஸின் சர்ச்சைக்குரிய தேசியவாதக் கட்சியின் (Rassemblement national) தலைவி மரின் லு பென்( Marine Le Pen) இவ்வாறு கூறியிருக்கிறார்.நேற்றிரவு BFM தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கேள்விகளுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
அதிபர் தேர்தலில் வெற்றி அடைவார் என்ற நம்பிக்கை வலுவாக இருப்பதாகக் குறிப்பிட்ட மரின் லு பென், தனது ஆட்சியில் அமைச்சுப் பொறுப்புக்களை வகிக்கக் கூடியவர்கள் யார் என்பது தொடர்பில் சிலரது பெயர்களையும் வெளியிட்டார்.
பதவிக்கு வந்தவுடன் "தேசிய ஒற்றுமை அரசாங்கம்" (gouvernement d’union nationale) ஒன்றை நிறுவப்போவதாகவும் தனது முதல் அரசியல் நடவடிக்கையாக வெளிநாட்டவர் குடியேற்றம் தொடர்பில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு (un référendum sur l’immigration) நடத்தப் படும் எனவும் அந்த நேர்காணல் நிகழ்ச்சியில் அவர் அறிவித்தார்.
"எனக்கு வெளிநாட்டினர் மீது எதிர்மறையான உணர்வுகள் இல்லை, வெறுப்பு இல்லை, வெளிநாட்டினர் மீது எனக்கு எந்தவித பயமும் இல்லை.(Je n’ai pas peur des étrangers) " "குடியேற்றத்தைப் பற்றியும் நான் பயப்படவில்லை, நான் அதை என் நாட்டுக்கு மோசமாகக் கருதுகிறேன். சட்டவிரோத குடியேற்றத்தின் எதிர்மறையான விளைவுகளை நான் காண்கிறேன், அது நமது பொது நிதிகளை ஏப்பமிடுகிறது. நம் நாட்டில் பாதுகாப்பின்மை மோசமடைந்து வருவதற்கான முக்கிய காரணிகளில் அதுவும் ஒன்றாகும். பொது ஒழுங்கிற் கும் இடையூறுகளை உருவாக்குகிறது, அதை நாங்கள் பொறுப்பேற்க வேண்டும்" -இவ்வாறு அவர் விவரித்துக் கூறினார்.
நேற்றைய நேர்காணலில் அரசின் தடுப்பூசி வேகத்தைக் கடுமையாக விமர்சித்த அவர், 'அஸ்ராஸெனகா' தடுப்பு மருந்து குறித்து ஆழமான ஆய்வு அவசியம் என்று குறிப்பிட்டார்.
பிரான்ஸில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் அதிகாரத்தைக் கைப்பற்றக் கூடிய அளவுக்கு செல்வாக்கு மிக்கவராகக் கருதப்படுகிறார் மரின் லு பென்.
நாட்டின் 48 வீதமானவர்கள் - அல்லது இரண்டு பேரில் ஒருவர் - அவரது வெற்றிவாய்ப்பு உறுதி என்று நம்புகின்றனர். கருத்துக்கணிப்புகள் அதனை உறுதி செய்துள்ளன.( அடைப்புக் குறிகளுக்குள் உள்ளவை பிரெஞ்சு மொழிச் சொற்கள்)
குமாரதாஸன். பாரிஸ்.
12-03-2021{{retweet_count}}{{favorite_count}} -
'உங்களுக்கு நிச்சயமாக கொல்ல வேண்டும் என்றால், தயவு செய்து அவர்களுக்கு பதிலாக என்னைச் சுடுங்கள்'. என மியான்மரில் வாழும் ஒரு கன்னியாஸ்திரி ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காப்பாற்ற ராணுவத்தினரிடம் இப்படியொரு வேண்டுகோளை வைத்துள்ளார்.
ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பினால் பாதிக்கப்பட்டு இருக்கும் மியான்மரில் கன்னியாஸ்திரி ஆன் ரோஸ் நு தாங் தற்போது ஒற்றுமையின் ஓர் அடையாளமாகி இருக்கிறார்.
மியான்மரின் வடக்குப் பகுதியில் இருக்கும் மித்கினா நகரத்தில் கத்தோலிக்க கன்னியாஸ்திரியான இவர், கடந்த மார்ச் 9ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காப்பாற்ற ஆயுதமேந்திய ராணுவ வீரர்களின் முன் மண்டியிட்டு வன்முறையை தடுக்க முயன்றது மியான்மர் நாட்டில் பலராலும் பரவலாக பாராட்டப்பட்டது.
கடந்த மார்ச் 9ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காப்பாற்ற, தரையில் மண்டியிட்டு, திறந்த கைகளோடு, ராணுவ அதிகாரிகளிடம் தேவாலயத்தை விட்டுச் செல்லுமாறு வேண்டிய கன்னியாஸ்திரி ஆன் ரோஸின் படங்கள் உலக அளவில் தலைப்புச் செய்தியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.
"நீங்கள் இங்கிருந்து வெளியேறும் வரை நான் எழுந்திருக்கமாட்டேன்" என ராணுவத்திடம் கூறினார் ஆன் ரோஸ் நு தாங்.
கன்னியாஸ்திரியின் முன் ஆயுதமேந்திய ராணுவ வீரர்கள் இருவரும், தரையில் மண்டியிட்டு அவரை வணங்கினர். தங்களுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமை இருப்பதாகக் கன்னியாஸ்திரியிடம் கூறினர் ராணுவத்தினர்.
"உங்களுக்கு உண்மையாகவே கொல்ல வேண்டுமென்றால், தயவு செய்து அவர்களுக்கு பதிலாக என்னைக் கொல்லுங்கள், நான் என் உயிரைத் தருகிறேன்" என அவ்வதிகாரிகளிடம் கூறினார் கன்னியாஸ்திரி ஆன் ரோஸ் நு தாங்
சமீபத்தில் நடந்த தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் கூறி, கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மியான்மர் ராணுவம் ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. அப்போதிலிருந்து மியான்மரில் தொடர்ந்து மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மியான்மரில் ராணுவ ஆட்சியை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும், ஆங் சாங் சூச்சி உட்பட அந்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் எனக் கோரி வரும் இந்த மக்கள் போராட்டத்தில் குறைந்தபட்சம் 54 பேர் இறந்திருக்கலாம். ஆங் சாங் சூச்சி பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
மார்ச் 9அன்று மித்கினா சம்பவத்துக்குப் பிறகு, அந்த இக்கட்டான தருணத்தில், கன்னியாஸ்திரி ஆன் ரோஸ் நு தாங் மனதில் என்ன மாதிரியான எண்ணங்கள் வந்து போயின என பிபிசி பர்மிஸ் சேவையிடம் பகிர்ந்து கொண்டார்.
"உங்களுக்கு கொல்ல வேண்டுமானால் என்னைக் கொல்லுங்கள், நான் என் உயிரைத் தருகிறேன் எனக் கூறினேன், பின் அவர்கள் அவ்விடத்தை விட்டுச் சென்றார்கள்."
"அங்கு குழந்தைகள் சிக்கிக் கொண்டிருந்தனர், அவர்களுக்கு எங்கு செல்வது என தெரியவில்லை. அவர்கள் மிகவும் பயந்து போய் இருந்தார்கள்," எனஆன் ரோஸ் குறிப்பிட்டார்.
"அப்போது நான் தியாகம் செய்தே ஆக வேண்டும் என எனக்கு தோன்றியது."
"அதன் பிறகு குழந்தைகள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் பசியோடும், தாகத்தோடும் பயந்து போய் இருந்தார்கள். வீட்டுக்குச் செல்லக்கூட அவர்களுக்கு தைரியமில்லை," என்றார்.
இருப்பினும் அந்த பகுதியில் ராணுவத்தினர் தொடர்ந்து போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி கொண்டிருந்தனர்.
"இந்த உலகமே சீர்குலைந்து கொண்டிருப்பது போலத் தோன்றியது, துப்பாக்கிச் சத்தம் மிக அதிகமாக இருந்தது. நான் தேவாலயத்தை நோக்கி ஓட வேண்டி இருந்தது," என பிபிசியிடம் கூறினார் அவர்.
"எல்லோரையும் தரையில் படுக்குமாறு கூறினேன், ஆனால் யாரும் என் குரலைக் கேட்க முடியவில்லை".
கன்னியாஸ்திரி ஆன் ரோஸ் எவ்வளவோ முயற்சித்தும், அவர் மறைந்திருந்த இடத்துக்கு அருகிலேயே ஒருவர் உயிரிழந்தார்.
தலையில் குண்டடிபட்ட ஒருவரைக் காப்பாற்ற தான் ஓடியதாகவும், அவர் மோசமாக காயப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும் கூறினார்.
"நான் குண்டடிபட்டவரைக் அழைத்துச் செல்ல விரும்பினேன். ஆனால் என்னால் அவரைத் தனியாக அழைத்துச் செல்ல முடியவில்லை எனவே அங்கிருந்தவர்களிடம் எனக்கு உதவுமாறு கூறினேன்," என்றார் கன்னியாஸ்திரி.
அதன் பிறகு கன்னியாஸ்திரி மற்றும் அவரின் உதவியாளர்கள் தொடர்ந்து கண்ணீர் புகை குண்டுகள் வீசப்படுவதை உணர்ந்தார்கள்.
"என் கண்கள் எரிந்தன, நாங்கள் அனைவரும் வெப்பமாக உணர்ந்தோம். எப்படியோ குண்டடிபட்டவரின் உடலை எடுத்து வர முடிந்தது. எங்களைச் சுற்றி குழந்தைகள் அழுது கொண்டிருந்தார்கள்." என்றார்.
கடந்த திங்கட்கிழமை மித்கினாவில் நடந்த போராட்டத்தில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மியான்மரின் காவலர்கள் மற்றும் மக்களுக்கு இடையில் அதிகரித்து வரும் வன்முறை குறித்து ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
BBC
{{retweet_count}}{{favorite_count}} -
வைத்தியசாலைக்கு அழுத்தம் அதிகரிப்பு!
பாரிஸ் பிராந்திய மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப்பிரிவுகளில் உள்ள கொரோனா நோயாளிகள் அங்கிருந்து நாட்டின் ஏனைய பிராந்தியங்களுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.
மருத்துவமனைகளில் அழுத்தம் அதிகரித்து வருவதை அடுத்தே நோயாளிகளை இடமாற்றும் பணிகள் வரும் நாட்களில் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று அரசாங்கப் பேச்சாளர் கப்ரியேல் அட்டால் தெரிவித்திருக்கிறார்.
நெருக்கடியான அளவுக்கு மருத்துவ மனை அனுமதிகள் அதிகரித்துள்ள போதிலும் இல்-து-பிரான்ஸ்(Île-de-France) பிராந்தியத்தில் புதிதாகக் கட்டுப்பாடுகள் எதனையும் அமுல் செய்யத் தீர்மானிக்கப் படவில்லை என்று இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் நோயாளர் குறைவாகக் காணப்படுகின்ற
மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கு இங்கிருந்து நோயாளர் களை இடம்மாற்றுவதன் மூலம் நெருக் கடியைச் சமாளிக்க முடிவு செய்யப்பட்டு ள்ளது.
12 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பாரிஸ் பிராந்தியத்தில் சுமார் ஆயிரம் அவசர சிகிச்சைப் படுக்கை வசதிகள் உள்ளன. அவற்றில் எண்பது வீதமா னவை ஏற்கனவே நோயாளிகளால் நிரம்பி விட்டன என்று தெரிவிக்கப் படுகிறது.இதேவேளை, நாட்டின் மேற் பிராந்திய (Hauts-de-France) மருத்துவமனைகளைச் சேர்ந்த அவசர நோயாளிகளை எல்லை நாடான பெல்ஜியத்தில் உள்ள ஆஸ்பத் திரிகளுக்கு இடம்மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
குமாரதாஸன். பாரிஸ்.
10-03-2021{{retweet_count}}{{favorite_count}} -
பிரபல அமெரிக்க நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே நடத்திய நேர்காணலில் பிரித்தானிய இளவரசரும் சஸ்ஸெக்ஸ் கோமகனுமான ஹரி மற்றும் அவரது மனைவியும் சீமாட்டியுமான மேகன் மார்க்கல் ஆகியோர் அரச குடும்பத்தின் மீது முன்வைத்த இன ரீதியிலான குற்றச்சாட்டு "கவலை அளிப்பதாகவும்" "அது மிகவும் தீவிரமானதாக எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும்" பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அவர்களின் நினைவு கூரல்கள் மாறுபடலாம்" ஆனால் இந்த விவகாரம் குறித்து தனிப்பட்ட முறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நேர்காணலின்போது, "ஆர்ச்சிக்கு ஏன் இளவசர் பட்டம் கிடைக்கவில்லை. அது இன ரீதியிலானதா, நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்?" என ஓப்ரா கேட்டபோது, "உண்மையான பதிலை தெரிவிக்கிறேன்" என்று கூறிய மேகன், "அது நான் கர்ப்பமாக இருந்த மாதங்கள். அப்போதே எனது பிள்ளைக்கு பாதுகாப்பு கிடைக்காது, பட்டம் கிடைக்காது என்று நாங்கள் பேசத் தொடங்கியிருந்தோம். பிறப்பிலேயே மகனின் கருப்பு நிறம் பற்றிய கவலைகளும் பேச்சுகளும் எழுந்தன," என மேகன் கூறியபோது, "யார் என்ன பேசினார்கள்" என ஓப்ரா கேள்வி எழுப்பினார்.
ஆனால் அதற்கு நேரடி பதிலை அளிக்க மறுத்த மேகன், "அது அவர்களுக்கு மிகவும் பாதிப்பை தரலாம். அரச குடும்பத்திடம் இருந்து ஹரிக்கும் அவர் மூலமாக எனக்கும் வந்த பதில்கள் அவை. பகுதி, பகுதியாக நடந்த அந்த உரையாடல்களை கேட்பது மிகவும் கடுமையானதாக இருக்கும்" என்று கூறினார்.
இந்த நிலையில், ஹரி மற்றும் மேகன் மார்க்கல் ஆகியோர் "எப்போதுமே மிகவும் நேசிக்கப்படும் குடும்ப உறுப்பினர்களாக இருப்பார்கள்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹரி மற்றும் மேகனின் நேர்காணலுக்கு பின்னா் பிரித்தானிய அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் இடையே நடந்த கூட்டங்களுக்கு பிறகு இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.
தங்களது மகனின் தோல் நிறம் குறித்த கேள்வியை அரசி எலிசபெத் அல்லது இளவரசர், எடின்பெர்க் கோமகன் பிலிப் ஆகியோர் எழுப்பவில்லை என நேர்காணலின்போதே ஹாரி விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நேர்காணல் முதல் முறையாக அமெரிக்காவில் ஒளிபரப்பான ஒன்றரை நாட்களுக்குப் பிறகு வெளியாகியுள்ள அரண்மனையின் இந்த அறிக்கையில், "கடந்த சில ஆண்டுகள் ஹரி மற்றும் மேகனுக்கு எவ்வளவு சவாலானதாக இருந்திருக்கும் என்பதை அறிந்து முழு குடும்பமும் வருத்தமடைகிறது. இந்த நேர்காணலின்போது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அதுவும் குறிப்பாக இன ரீதியிலான பிரச்னைகள் கவலையளிக்கின்றன. அவர்களின் சில நினைவுகூரல்கள் மாறுபடலாம் என்றாலும், அவை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, அதுகுறித்து குடும்பத்தினரால் தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுக்கப்படும். ஹரி, மேகன் மற்றும் ஆர்ச்சி எப்போதும் மிகவும் நேசிக்கப்படும் குடும்ப உறுப்பினர்களாக இருப்பார்கள்" என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தங்களது விளக்கத்தை கவனமுடன் வெளிப்படுத்தவும், அதற்கு முன்னதாக இந்த நேர்காணல் பிரித்தானியாவில் திங்கள்கிழமை இரவு ஒளிபரப்பப்பட்டபோது அதை முதலில் பிரித்தானிய பொதுமக்கள் பார்ப்பதற்கான வாய்ப்பை வழங்கவும் அரச குடும்பத்தினர் விரும்பியதாக கருதப்படுகிறது.
பிரித்தானிய நேரப்படி திங்கட்கிழமை இரவு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான இந்த நேர்காணலை சுமார் 1.1 கோடி பிரித்தானிய மக்கள் பாா்த்தது அதுமட்டுமின்றி, பிரதமர் போரிஸ் ஜோன்சனும் இந்த நேர்காணலை பார்த்தார் என்பதை அவரது அலுவலகம் உறுதிசெய்தாலும், மேலதிக கருத்துகளை தெரிவிக்க மறுத்துவிட்டது.
'நான் உயிருடன் இருக்க விரும்பவில்லை'
அமெரிக்க தொலைக்காட்சியான சிபிஎஸ் ப்ரைம்டைம் ஸ்பெஷல் என்ற நிகழ்ச்சியில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே நடத்திய இந்த நேர்காணலின்போது அரச குடும்ப வாழ்க்கை குறித்த மேகனின் கருத்துகளை ஓப்ரா கேட்டபோது, "நான் உயிருடன் இருக்க விரும்பவில்லை" என்று கூறிய அவர், இதை நான் ஹரியிடம் கூறுவதற்கு "வெட்கப்படுகிறேன்", ஏனெனில் அவர் "சந்தித்த இழப்புகள்" அவ்வளவு அதிகம் என்று கூறினார்.
அப்போது நீங்கள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை கொண்டிருந்தீர்களா என்று ஓப்ரா கேட்டதற்கு, "ஆம்" என்று மேகன் பதிலளித்தார். "அது எல்லா பிரச்னைகளையும் தீர்த்துவிடும் என்று நினைத்தேன்" என்று அவர் கூறினார்.
மேலும், தனது இந்த எண்ணத்திலிருந்து விடுபட தேவையான ஆலோசனையை பெற "அமைப்பொன்றின்" உதவியை நாடும் தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் மேகன் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இந்த நேர்காணலில் பேசப்பட்ட பல்வேறு விஷயங்களும் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் பேசுபொருளானது என்பது குறிப்பிடத்தக்கது. #ஹரி #மேகன் #ஆர்ச்சி #பக்கிங்காம் #இனரீதியிலான #குற்றச்சாட்டு
நன்றி பிபிசி
{{retweet_count}}{{favorite_count}} -
14 வயது பள்ளி மாணவி ஒருத்தி சக மாணவன், மாணவி இருவரால் தாக்கப் பட்டு சென் (Seine) நதியில் தள்ளி வீழ்த்திக் கொல்லப்பட்டிருக்கிறார். பாரிஸ் நகருக்கு வெளியே ஆர்ஜொந்தை (Argenteuil) என்னும் பகுதியில் நேற்றிரவு ஊரடங்கு நேரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.
ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் தகவல்களின்படி பள்ளியில் இடம்பெற்ற துன்புறுத்தல்களின் தொடர்ச்சியாகவே அந்த மாணவி பலியாகி உள்ளார் என்பது தெரியவருகிறது.
ஆர்ஜொந்தையில் அமைந்துள்ள தொழில் பள்ளியில் (lycée professionnel Cognacq-Jay d’Argenteuil) பயிலும் மாணவியை 15 வயதான சக மாணவன் ஒருவனும் மற்றொரு மாணவியும் இணைந்தே தாக்கி நதியில் தள்ளி உள்ளனர் எனக் கூறப்படுகிறது.
ஆர்ஜொந்தையில் A15 நெடுஞ்சாலை பாலம் அமைந்துள்ள பகுதியில் நதி நீரில் இருந்து மாணவியின் சடலத்தை காவல்துறை சுழியோடிகள் நேற்றிரவு மீட்டெடுத்தனர்.
சடலத்தின் தலையிலும் முகத்திலும் தாக்கப்பட்ட அடையாளங்கள் காணப்படுவதாக பிரேதப் பரிசோதனை யில் தெரியவந்துள்ளது.மாணவியை ஆற்றில் தள்ளிய தகவலை வீட்டில் தனது தாயாரிடம் கூறிவிட்டு சக மாணவியையும் அழைத்துக் கொண்டு தலைமறைவாகிய மாணவனை காவல்துறையினா் இன்று அதிகாலை கைது செய்து இருவரையும் தடுத்து வைத் துள்ளனர்.
கொல்லப்பட்ட மாணவிக்கும் கொலையில் சம்பந்தப்பட்ட மாணவிக்கும் இடையே பள்ளியில் இருந்துவந்த பகைமையே கொலைக்கான காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
உயிரிழந்த மாணவியின் 'ஸ்னப்சற்' கணக்கினுள் ஊடுருவி படங்கள் மற்றும் பதிவுகளை அபகரித்து வெளியிட்டு அவரைத் துன்புறுத்தும் செயல்கள் பள்ளியில் இடம்பெற்றிருந்தன என்று சக மாணவர்கள் சிலர் சாட்சியம் வழங்கி உள்ளனர்.
பள்ளி நிர்வாகத்தினரும் காவல்துறையினரும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மாணவியின் குடும்பத்தி னருக்கு ஆர்ஜொந்தை நகர மேயர் Georges Mothron தனது ருவீற்றரில் அனுதாபம் தெரிவித்துள்ளார்.
*படம் :சம்பவம் நடந்த நதிப் பகுதியின் ஒரு தோற்றம் (Seine sous le pont A15) #மாணவி #நதியில் #கொலை #Argenteuil
----------------------------------------------------------------
-குமாரதாஸன். பாரிஸ்.09-03-2021
{{retweet_count}}{{favorite_count}} -
அமெரிக்க அரசு துறைகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடா்பாக ரஸ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்க அமொிக்கா முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசின் முக்கிய துறைகளான உள்துறை, பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, நிதி மற்றும் வணிகம் மற்றும் மைக்ரோசொப்ட் உள்பட 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இந்த சைபர் தாக்குதல் பல மாதங்களாக நடந்து கொண்டிருப்பதாகவும் இதனை தடுப்பது மிகவும் சிக்கலானது என்றும் அமெரிக்காவின் சைபர் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு பாதுகாப்பு முகாமை (சி.ஐ.எஸ்.ஏ) அப்போது தொிவித்திருந்தது.
இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் ரஸ்யா இருப்பதாக அமொிக்கா குற்றம் சுமத்திய போதிலும் ரஸ்யா அதற்கு மறுப்புத் தொிவித்திருந்தது.
அதேவேளை இது தொடா்பில் நடைபெற்ற விசாரணையின்போது மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவர் பிராட் ஸ்மித் இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் ரஸ்யாவின் உளவுத்துறை இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளதாக தொிவித்திருந்தாா். எனினும் இந்தக் குற்றச்சாட்டையும் ரஸ்யா மறுத்தது.
இந்த சைபர் தாக்குதல் குறித்து அப்போது பேசிய தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் தனது நிர்வாகத்தில் சைபர் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் எனத் தொிவித்திருந்தாா்.
இந்த நிலையில் ‘சோலார் விண்ட்ஸ் ஹக்கிங்' விவகாரத்தில் ரஸ்யா மீது வலுவான பொருளாதார தடைகளை விதிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத ஜோ பைடன் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் அளித்த தகவலின் பேரில் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளது.
சைபர் தாக்குதலுக்கு பதிலடியாக ரஸ்யா மீது பொருளாதார தடைகள் உள்ளிட்ட மிகவும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க ஜோ பைடன் நிர்வாகம் தயாராகி வருவதாகவும் அடுத்த 3 வாரங்களுக்குள் ரஸ்யாவுக்கு எதிரான இந்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #ரஸ்யா #பொருளாதார_தடை #அமொிக்கா #சைபர்_தாக்குதல்
{{retweet_count}}{{favorite_count}} -
பிரான்ஸில் 'பக்கெற்' (baguettes) எனப்படுகின்ற சாதாரண பாண் நாளாந்தம் பெரும்பாலானோர் நுகர்கின்ற பிரதான உணவுப் பொருளாக உள்ளது. இதனைக் கவனத்தில் கொண்டு பாண் வாங்குவோரிடம் குறிப்பாகப் பெண்கள் மத்தியில் வீட்டு வன்முறைகள்(Domestic violence) குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த புதுவிதத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப் பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றி விழிப்பூட்டும் விடயங்கள் அச்சிடப்பட்ட பாண் சுற்றும் கடதாசிப் பைகளை வெதுப்பகங்களுக்கு வழங்கும் சேவையில் சமூக நல அமைப்பு ஒன்று ஈடுபட்டுள்ளது.
பாரிஸின் புறநகரான நுவாசி லூ செக்(Noisy-le-Sec - Seine-Saint-Denis) நகரசபை மேயர் தனது நிர்வாகப் பிரிவுக்குள் உள்ள வெதுப்பகங்களில் பரீட்சார்த்தமாக ஆரம்பித்த இத் திட்டத்தை பெண்களுக்காக சமூக வலைத்தளங்களில் இயங்கும்
l'association En avant toute(s)இயக்கம் நாடு முழுவதும் விஸ்தரித்துள்ளது.
விழிப்புணர்வுத் தகவல்கள் பொறிக்கப்பட்ட பேப்பர் உறைகள் லட்சக்கணக்கில் அச்சிடப்பட்டு மகளிர் தினமாகிய நேற்று நாடெங்கும் வெதுப்பகங்களுக்கு விநியோகிக்கப் பட்டுள்ளன.கணவன் - மனைவி இடையிலான வன்முறைகளின் அளவீடுகள், அது குறித்து முறையிடும் வழி முறைகள், தொடர்பு இலக்கங்கள் போன்ற பல தகவல்கள் பாண் உறைகளில் அச்சிடப்பட்டுள்ளன.
குமாரதாஸன். பாரிஸ்.
09-03-2021{{retweet_count}}{{favorite_count}} -
பிரான்ஸின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல செல்வந்தருமாகிய ஒலிவியே டாசோல்ட் (Olivier Dassault) ஹெலிக் கொப்ரர் விபத்தொன்றில் உயிரிழந்தார்.
நாட்டின் வடக்கே நோர்மன்டி(Normandy) பிராந்தியத்தில் அவர் பயணம் செய்த ஹெலி மரம் ஒன்றுடன் மோதி விபத்துக் குள்ளானது என்று அறிவிக்கப்படுகிறது.
டூவிலில் (Deauville) உள்ள தனது விடுமுறைக்கால இல்லத்துக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய சமயமே அவரது தனிப்பட்ட ஹெலிக்கொப்ரர் விபத்துக்குள்ளாகியது. விமானியும் உயிரிழந்தார்.
ஹெலிக்கொப்ரர் தரையில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் மரம் ஒன்றில் சிக்கியது என்று கூறப்படுகிறது. சிவில் விமானப் பாதுகாப்பு ஆய்வு நிபுணர்கள் குழு ஒன்று சம்பவம் தொடர்பான விசாரணைகளைத் தொடக்கி உள்ளது.
பிரபல கோடீஸ்வரர் சேர்ஜ் டாசோல்டின் மகனாகிய ஒலிவியே டாசோல்ட்(வயது 69) அரசியல், தொழில்துறை, படைத்துறை எனப் பல துறைகளில் அறியப்பட்ட மூத்த அரசியல் பிரமுகர் ஆவார்.
வலதுசாரி றிப்பப்ளிக்கன் (Les Republicains) கட்சியைச் சேர்ந்த அவர் சுமார் இருபது வருடகாலம் அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டுவந்தவர்.
பிரான்ஸின் வடபகுதியில் உள்ள Oise தேர்தல் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் விமானப்படையிலும் சேவையாற்றி இருந்தார்.அவரது திடீர் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலிச் செய்திகளை வெளியிட்டுவருகின்றனர்.
"நாட்டை நேசித்தவர். தன் வாழ்நாள் முழுவதும் பிரான்ஸ் நாட்டுக்குச் சேவை புரிவதை நிறுத்திக் கொள்ளாத ஒரு வழிகாட்டி ஒலிவியே டாசோல்ட். அவரது கொடூரமான இழப்பு ஈடுசெய்ய முடியாதது " - என்று அதிபர் எமானுவல் மக்ரோன் தனது ருவீற்றர் செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார். #பிரெஞ்சு #விபத்தில் #மரணம் #Olivier_Dassault
--------------------------------------------------------------------
{{retweet_count}}{{favorite_count}} -
பிரபல அமெரிக்க தொலைக்காட்சியான சிபிஎஸ் ப்ரைம்டைம் ஸ்பெஷல் என்ற நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே நடத்திய நேர்காணலில் பிாித்தானிய இளவரசரும் சஸ்ஸெக்ஸ் கோமகனுமான ஹரி மற்றும் அவரது மனைவியும் சீமாட்டியுமான மேகன் மார்க்கல் வெளியிட்டு வரும் நேர்காணலில் வெளியிடும் விவரங்கள் பேசுபொருளாக மாறியுள்ளன.
பிாித்தானிய அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்த இளவரசர் ஹரி, மேகன் மார்க்கல் ஆகியோர் தங்களது மகனுடன் தற்போது அமெரிக்காவில் குடியேறி விட்டனர்.
அடிப்படையில், ஹரியும் மேகன் மார்க்கலும் இன்னமும் அரச குடும்பத்தின் உறுப்பினர்களாக தொடர்ந்தாலும், கடந்த மாதம் இவர்கள் இருவரும் அரசு குடும்ப உறுப்பினர்களுக்கான பொறுப்புகளிலிருந்து நிரந்தரமாக விடுவிக்கப்படுவதாக பிாித்தானிய மகாராணி எலிசபெத் அறிக்கையொன்றின் மூலம் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று ஒளிபரப்பான இரண்டு மணி நேர நேர்காணலில் ஹரி, மேகன் ஆகிய இருவரும் அரச குடும்பத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும், தங்களது தனிப்பட்ட வாழ்வில் சந்தித்த சவால்கள், தங்களுக்கு பிறக்கவிருக்கும் அடுத்த குழந்தையின் பாலினம் உள்ளிட்டவை குறித்து பேசினர்.
அவற்றில் சில முக்கியமான விடயங்களை இங்கே பார்ப்போம்.
'நான் உயிருடன் இருக்க விரும்பவில்லை'
அரச குடும்ப வாழ்க்கை குறித்த மேகனின் கருத்துக்களை ஓப்ரா கேட்டபோது, "நான் உயிருடன் இருக்க விரும்பவில்லை" என்று கூறிய அவர், இதை நான் ஹரியிடம் கூறுவதற்கு "வெட்கப்படுகிறேன்", ஏனெனில் அவர் "சந்தித்த இழப்புகள்" அவ்வளவு அதிகம் என்று கூறினார்.
அப்போது நீங்கள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை கொண்டிருந்தீர்களா என்று ஓப்ரா கேட்டதற்கு, "ஆம்" என்று மேகன் பதிலளித்தார். "அது எல்லா பிரச்னைகளையும் தீர்த்துவிடும் என்று நினைத்தேன்" என்று அவர் கூறினார்.
மேலும், தனது இந்த எண்ணத்திலிருந்து விடுபட தேவையான ஆலோசனையை பெற "அமைப்பொன்றின்" உதவியை நாடும் தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் மேகன் தெரிவித்துள்ளார்.
"குடும்பத்தினர் என்னை பொருளாதார ரீதியில் கைவிட்டனர்"
ஒரு கட்டத்தில் தனது குடும்பத்தினர் தன்னை பொருளாதார ரீதியில் முற்றிலும் கைவிட்டதாகவும், தனது பாதுகாப்புக்கு தானே பணம் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் இளவரசர் ஹாரி நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
அரச குடும்ப பொறுப்பை துறக்க என்ன காரணம்?
எனினும், தன்னுடைய தாய் விட்டுச்சென்ற பணம் தன்னிடம் இருப்பதாக அவர் கூறினார். "என்னைப் பொறுத்தவரை, நான் மிகவும் நிம்மதியாக இருக்கிறேன். என் மனைவி என் பக்கத்தில் அமர்ந்திருக்க, உங்களுடன் பேசுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்," என்று அவர் கூறுகிறார்.
அரச குடும்ப பொறுப்புகளிலிருந்து விலகியபோது சந்தித்த விடயங்கள் குறித்து மேலும் பேசிய அவர், "இது எங்கள் இருவருக்கும் நம்பமுடியாத அளவிற்கு கடினமாக இருந்தது. ஆனால் குறைந்தபட்சம் நாங்கள் ஒருவருக்கொருவராக இருந்தோம்" என்று ஹரி கூறினார்.
அரச குடும்ப பொறுப்பில் இருந்து விலக என்ன காரணம் என்று ஓப்ரா கேட்டபோது, "அது அவசியப்பட்டது," என்று ஹரி கூறினார். "நாங்கள் எல்லா இடங்களுக்கும் தனித்தனியாகவும் இணைந்தும் சென்று உதவி கேட்டோம்" என்று அவர் கூறினார்.
அப்படியென்றால் நீங்கள் உதவி கேட்டு அது கிடைக்காமல் போனதால்தான் அந்த முடிவை எடுத்தீர்களா என ஓப்ரா கேட்டதற்கு, "ஆமாம்" என தெரிவித்த ஹரி, "அப்போதும் கூட நாங்கள் குடும்பத்தை விட்டு விடவில்லை," என்று கூறினார். அப்போது மேகன், "அவர்கள்தான் ஏற்கெனவே உள்ள ஒரு வகை பொறுப்பில், அதாவது அரச குடும்பத்து மூத்த உறுப்பினர் பொறுப்பில் இல்லாதவர்களாக நடந்து கொள்ள வேண்டும் என விரும்பினார்கள்," என்று தெரிவித்தார்.
எனது ஒரே வருத்தம் எல்லாம் வரலாறு மீண்டும் திரும்பிக் கொண்டிருக்கிறது என்பதுதான் என்று கூறிய ஹரி, சமூக ஊடக பரிணாமங்களும் போட்டியும், எனது தாய்க்கு நேர்ந்த நிலையை விட இது மிகவும் அபாயகரமானது என்பதை உணர்த்துகிறது என்று தெரிவித்தார்.
முன்னதாக நேர்காணலின் தொடக்கத்தில் கர்ப்பிணியான தனது கருவில் வளரும் குழந்தையின் பாலினம் பற்றி கூட தாங்கள் அறிந்திருந்ததாகவும், நேர்காணலின் இடையே ஹரியும் சேரும்போது அந்த தகவலை இருவரும் சேர்ந்து பகிர்வதாக மேகன் கூறினார்.
ராணியுடன் முதல் சந்திப்பு அனுபவம்
மகாராணியுடனான முதல் சந்திப்பு அனுபவம் பற்றி கேட்டதற்கு, "முதல் முறையாக பார்த்தபோது அது ஒரு பெரிய சம்பிரதாயமாக எனக்கு தோன்றவில்லை," என மார்க்கல் கூறினார். ஆனால், ஹரி தன்னிடம் மரியாதை செய்வது எப்படி என தெரியுமா என கேட்டபோது, "எப்படி செய்வது" என வியந்தேன் என்கிறார் மேகன்.
"உண்மையில் வெளியில்தான் அப்படி எல்லாம் நடக்கும். அரண்மனைக்கு உள்ளே அப்படி இருக்காது என்றே நினைத்தேன்," என்று மேகன் கூறினார். அப்போது தானும் ஹரியும் முழங்கால் மண்டியிட்டு மகாராணிக்கு மரியாதை தெரிவித்ததாக கூறிய அவர், அந்த நேரத்தில் எப்படி செய்தேன் என்பதை சரியாக நினைவுபடுத்திப் பார்க்க முடியவில்லை என்று தெரிவித்தார்.
நல்ல வேளையாக அரச குடும்பம் பற்றி அதிகமாக நான் அறிந்திருக்கவில்லை. அது பற்றி நான் ஆராயவும் இல்லை என்று மேகன் மேலும் கூறினார்.
மூன்று நாட்களுக்கு முன்பே நடந்த திருமணம்
"எங்களுடைய திருமணம் தேவாலயத்தில் முறைப்படி நடக்கவிருந்த மூன்று நாட்களுக்கு முன்பே எங்களுக்கு திருமணம் நடந்து விட்டது. இதுவரை அது பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. கேட்டர்பரி பேராயரை அழைத்து, உலகின் பார்வைக்குதான் பெரிய திருமணம், ஆனால், எங்களுடைய இணைப்புக்கான திருமணமாக இது நடக்க வேண்டும்" என்று கூறினோம் என்றார் மேகன். இந்த தகவலை முன்பே பதிவு செய்த கலந்துரையாடல் தொகுப்பின்போது மேகன், ஹாரி தம்பதி ஓப்ராவிடம் தெரிவித்தனர்.
மகாராணி எனக்கு அற்புதமானவர்
அரச குடும்பத்துக்கும் அமைப்புக்கும் இடையிலான வேறுபாட்டை வலியறுத்திக் குறிப்பிட்ட மேகன், "அது மக்கள் பற்றியும் அவர்களைச் சுற்றி நடக்கும் தொழில்கள் பற்றியுமானது. எனக்கு எப்போதுமே மகாராணி அற்புதமானவராக இருந்தார். அவருடன் இருப்பதை நேசித்தேன். 2018இல் அவரை முதலாவதாக பார்த்தபோது எனக்கு தனது பவள காதணிகளையும் நெக்லஸையும் பரிசாக வழங்கினார். எப்போதுமே அவர் உள்ளார்ந்த வரவேற்பை வழங்குபவராக இருந்தார் என்று மேகன் கூறினார்.
அவரைப் போலவே அரச குடும்பத்தில் உள்ளவர்கள் செய்தார்களா என ஓப்ரா கேட்டபோது, எல்லோரும் அப்படித்தான் இருந்ததாக நினைக்கிறேன் என மேகன் பதிலளித்தார்.
"தனிமை உணர்வு மேலோங்கியது"
அரச குடும்பத்தில் இருப்பது பற்றி அதிகம் விவரித்த மேகன் மார்க்கல், நினைத்தபடி நண்பர்களுடன் மதிய உணவுக்கு செல்ல முடியாதது போன்ற கட்டுப்பாடுகள் போடப்பட்டபோது, தனிமையில் இருப்பது போன்ற உணர்வு மேலோங்கியது என்று தெரிவித்தார்.
அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், சிறிது காலம் எங்கும் செல்லாமல் இருக்குமாறு கூறியதாகவும், அவரிடம் மாதக்கணக்கில் நான் எங்குமே வெளியே செல்லவில்லை என்று குறிப்பிட்டதாகவும் மேகன் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பொது முடக்கத்தால் மக்கள் கடந்த ஆண்டில் முடங்கியபோது அவர்கள் எவ்வாறு சுதந்திரத்தை இழந்திருப்பார்கள் என்ற நிலையுடன் தனது நிலையை மேகன் ஒப்பிட்டார்.
"பிள்ளைக்கு பட்டத்து உரிமையை கூட கிடைக்க விடவில்லை"
தங்களுக்கு ஆர்ச்சி மகனாக பிறந்தபோது அவரை இளவசர் ஆக அறிவிக்கவில்லை. அந்த தகவல் கிரகித்துக் கொள்ள மிகவும் கடினமாக இருந்தது. காரணம் அது பட்டம் பற்றியது மட்டுமல்ல. அவருக்கு பாதுகாப்பு கிடைக்காது என்பதுதான்.
இது எல்லாவற்றையும் எனக்கு அதுவரை கிடைத்திராத தாய் என்ற பட்டம் இருந்தது மிக முக்கியமானது. எனது மகன் பாதுகாப்பாக இல்லாதது மற்றும் இந்த குடும்பத்தின் முதல் வாரிசு, மற்ற பேரப்பிள்ளைகளைப் போல பட்டத்துடன் அழைக்கப்படாதது வருத்தம்தான். நான் கர்ப்பமாக இருந்தபோதே எனது பிள்ளைகளுக்கு இளவரசர் பட்டமோ இளவரசி பட்டமோ வழங்கப்படாமல் இருக்க விதிகள் மாற்றப்பட்டன. அப்படி பறிப்பது அவர்களின் உரிமை கிடையாது. ஏன் எப்படி செய்ய வேண்டும்?"
பட்டப்பெயர் தொடர்பாக நானும் ஹாரியும் முடிவு எடுத்ததாக வெளிவந்த தகவல்கள் தவறு" என்றும் மேகன் கூறினார்.
மகனின் நிறம் குறித்து கவலைப்பட்ட அரச குடும்ப உறுப்பினர்
"ஆர்ச்சிக்கு ஏன் இளவசர் பட்டம் கிடைக்கவில்லை. அது இன ரீதியிலானதா, நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்?" என ஓப்ரா கேட்டபோது, "உண்மையான பதிலை தெரிவிக்கிறேன்."
"அது நான் கர்ப்பமாக இருந்த மாதங்கள். அப்போதே எனது பிள்ளைக்கு பாதுகாப்பு கிடைக்காது, பட்டம் கிடைக்காது என்று நாங்கள் பேசத் தொடங்கியிருந்தோம். பிறப்பிலேயே மகனின் கருப்பு நிறம் பற்றிய கவலைகளும் பேச்சுகளும் எழுந்தன," என மேகன் கூறியபோது, "யார் என்ன பேசினார்கள்" என ஓப்ரா கேள்வி எழுப்பினார்.
ஆனால் அதை வெளியிட மறுத்த மேகன், "அது அவர்களுக்கு மிகவும் பாதிப்பை தரலாம். அரச குடும்பத்திடம் இருந்து ஹரிக்கும் அவர் மூலமாக எனக்கும் வந்த பதில்கள் அவை. பகுதி, பகுதியாக நடந்த அந்த உரையாடல்களை கேட்பது மிகவும் கடுமையானதாக இருக்கும்" என்று கூறினார். #இளவரசர்_ஹரி #மேகன் #அரசகுடும்பம் #ஆர்ச்சி #குற்றச்சாட்டுகள்
நன்றி பிபிசிதமிழ்
{{retweet_count}}{{favorite_count}} -
ஈராக்கில் உள்ள முஸ்லிம் மற்றும் கிறித்தவ மதத் தலைவர்கள் பகையை ஒதுக்கிவிட்டு அமைதி மற்றும் ஒற்றுமைக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என போப் பிரான்சிஸ் கேட்டுக் கொண்டுள்ளாா்
ஈராக் சென்றுள்ள போப் பிரான்சிஸ் அந்நாட்டின் பிரதமர் முஸ்தபா, ஜனாதிபதி பர்ஹம் சாலிஹ் ஆகியோரைச் சந்தித்தபின், ஈராக்கின் மூத்த ஷியா தலைவரான அயத்துல்லா அலி அல் சிஸ்தானியைச் சந்தித்துள்ளாா்.
சி ஸ்தானியுடனான சந்திப்பின் போது அவா் ஐஎஸ் தீவிரவாதிகளால் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தெற்கு ஈராக்கில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட அவா் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போப் பிரான்சிஸ்
“முஸ்லிம்கள், கிறித்தவர்கள் மற்றும் யூதர்களுக்கு பொதுவான தீர்க்கதரிசியான ஆபிரகாமின் பிள்ளைகளாக சமாதானத்திற்காக வேண்டுவோம். இங்குள்ள கிறித்தவ, இஸ்லாமிய மதத் தலைவர்கள் தங்களிடையே நிலவும் பகைமைகளை நிறுத்திவிட்டு அமைதிக்காகவும் ஒற்றுமைக்காகவும் இணைந்து பணியாற்ற வேண்டும். கடவுள் இரக்கமுள்ளவர். நம்முடைய சகோதர, சகோதரிகளை வெறுப்பதன் மூலம் அவருடைய பெயரைக் களங்கப்படுத்தக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார். #ஈராக் #மதத்தலைவர்கள் #அமைதிக்காக #போப்_பிரான்சிஸ்
{{retweet_count}}{{favorite_count}} -
நாசா ரோவர் விண்கலம் செவ்வாயில் தரையிறங்கி இரண்டு வாரங்களின் பின்னர் தனது முதல் தரை நகர்வை நிறைவு செய்துள்ளது.
பெப்ரவரி 18 ஆம் திகதி செவ்வாயில் "ஜெஸீரோ கிரேட்டர்" (Jezero Crater) என்கின்ற பள்ளத்தாக்குப் பகுதியில் தரையிறங்கிய ரோவரில் அதன் கருவிகளைப் பரிசீலிக்கும் பணியை விஞ்ஞானிகள் கடந்த சில நாட்களாக மேற்கொண்டிருந்தனர். அப்பணிகள் வெற்றிகரமாக முடிவடைந்ததை அடுத்தே விண்கலம் அதன் முதலாவது பயணத் தைத் தொடங்கியது என்ற தகவலை நாசா (NASA) வெளியிட்டிருக்கிறது.
வியாழக்கிழமை அது பரீட்சார்த்தமாக சில மீற்றர்கள் நகர்ந்தபோது தரையில் அதன் சக்கரங்களின் தடயங்களை கமெராக்கள் படம் பிடித்து அனுப்பின. செவ்வாயில் இதற்கு முன்னர் தரையிறங்கிய சிறிய விண்கலகளை விட Perseverance வேகமானது .பலமான ஆறு சக்கரங்களுடன் அது நாளொன் றுக்கு 200 மீற்றர்கள் தூரம் பயணிக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித் துள்ளனர். செவ்வாயில் ஒரு நாள் என்பது பூமியின் ஓரு நாளை விட மிக நீண்டது.கார் ஒன்றின் அளவைக் கொண்ட Perseverance விண்கலம் இயங்குவதற் கான சக்தி அணு பற்றறி (Nuclear Battery) மூலம் வழங்கப்படுகிறது. அங்கு இரவில் நிலவும் கடுமையான குளிரில் தாக்குப் பிடிப்பதற்கான வெப்பத்தை சிறிய அணு மின் பிறப்பாக்கியே வழங்குகிறது. புளுரோனியம்(plutonium) திரவ எரிபொருள் மூலம் அணு பற்றறிக்கு (Nuclear Battery) மின்னூட்டும் நவீன தொழில் நுட்பம் அதில் பயன்படுத்தப் படுகிறது.அதன் அணு பற்றறி தொடர்ந்து 14 ஆண்டுகள் சக்தி வழங்கக் கூடியது எனத் தெரிவிக்கப்படுகிறது.
குமாரதாஸன். பாரிஸ்.
06-03-2021{{retweet_count}}{{favorite_count}} -
டென்மார்க் அரசு அங்கு தங்கி உள்ள சிரிய நாட்டு அகதிகளை அவர்களது தாயகத்துக்குத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
போருக்குப் பின்னர் சிரியத் தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இயல்பு வாழ்வுக்கு ஏற்ற சூழ்நிலை திரும்பி உள்ளது என்று தெரிவித்தே அகதிகள் அங்கு திரும்பிச் செல்லுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
டென்மார்க்கில் தஞ்சமடைந்திருந்த 94 சிரியப் பிரஜைகளது வதிவிட அனுமதி மீளப்பெறப்பட்டுள்ளது. இவ்வாறு சிரிய அகதிகளது வதிவிட உரிமையைப் பறித்து அவர்களைத் திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ள முதலாவது ஐரோப்பிய நாடு டென்மார்க் ஆகும்.
அகதிகள் அனைவரும் நாடுகடத்தலுக்கான இடைத்தங்கல் நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர். எனினும் அவர்கள் தாங்களாகவே தாயகம் திரும்புமாறு கேட்கப்படுவர் என்றும் எவரும் டென்மார்க்கில் இருந்து வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
".. தேவையானவர்களுக்கு அவசியமான தருணத்தில் டென்மார்க் தஞ்சம் வழங்கும். காலப்போக்கில் அவர்களது சொந்த நாடுகளில் இயல்பு நிலை திரும்பும் போது முன்னாள் அகதி ஒருவர் அங்கு மீளத் திரும்பி புதிய வாழ்வைத் தொடங்குவது கட்டாயம்.." - என்று குடியேற்ற விவகார அமைச்சர் Mattias Tesfaye ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித் திருக்கிறார்.
மிகக் கடுமையான தஞ்சக் கொள்கை மூலம் புகலிடக் கோரிக்கையாளர்கள் என்று எவரையும் அனுமதிக்காத நாடாக டென்மார்க்கை மாற்றுவதே தனது இலக்கு என்று பிரதமர் மெற் பிரெட்றிக்சென் (Mette Frederiksen) அம்மையார் அண்மையில் தெரிவித் திருந்தார். அவரது அந்த நிலைப்பாட்டை மனித உரிமை அமைப்புகள் கண்டித் துள்ளன. #சிரிய_அகதிகளை #வெளியேற்ற #டென்மார்க் #டமாஸ்கஸ் #இடைத்தங்கல் #Mette Frederiksen
------------------------------------------------------------------
குமாரதாஸன். பாரிஸ்.04-03-2021
{{retweet_count}}{{favorite_count}} -
மியன்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தின் போது நேற்று புதன்கிழமை மட்டும் ஒரே நாளில் குறைந்தது 38 போ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதனையடுத்து இதனை ஒரு ரத்தம் தோய்ந்த நாள் என ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.
மியன்மாரில் இருந்து அதிர்ச்சிகரமான காணொளிகள் வெளிவருவதாக அந்நாட்டுக்கான ஐ.நா. தூதர் கிறிஸ்டைன் ஷ்ரானர் பர்ஜனர் தொிவித்துள்ளாா்.
பாதுகாப்புப் படையினர், ரப்பர் மற்றும் உண்மையான குண்டுகளால் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது
போராட்டங்கள் நடந்ததில் இருந்து இதுவரை குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஷ்ரானர் தெரிவித்துள்ளார்.
நிராயுதபாணியான தன்னார்வ மருத்துவப் பணியாளர் ஒருவரை காவல்துறையினா் அடிப்பது காணொளி ஒன்றில் தெரிகிறது என்றும் ஒரு போராட்டக்காரர் தெருவிலேயே சுடப்படுவதை மற்றொரு காணொளி காட்டுகிறது எனவும் வொ் குறிப்பிட்டுள்ளா்ா.
யாங்கோன் உள்ளிட்ட பல நகரங்களில் எச்சரிக்கை ஏதும் செய்யாமல் பெரும் எண்ணிக்கையிலான பொது மக்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கொல்லப்பட்டவர்களில் 14 வயது மற்றும் 17 வயதுடைய இரண்டு இளைஞா்களும் 19 வயது பெண் ஒருவரும் உள்ளடங்குவதாகவும் சேவ் த சில்ட்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது.
மியன்மாரில் ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளதுடன் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மைன்ட் உள்பட 100-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து நாட்டில் ஜனநாயகம் மீட்கப்பட வேண்டும் எனக் கோரி கடந்த சில வாரங்களாக அந்த நாட்டு மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது #மியன்மார் #போராட்டக்காரா்கள் #சுட்டுக்கொலை #ராணுவ_ஆட்சி #ஆங்சான்சூகி
{{retweet_count}}{{favorite_count}} -
சுவிடனில் இருபது வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் சிவிலியன்கள் எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர். சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.தாக்குதலாளியை க் காவல்துறையினா் காலில் சுட்டுக் கைது செய்துள்ளனர்.
சுவீடனின் தெற்கே Vetlanda என்ற சிறிய நகரத்தில் நேற்று மாலை இந்த தாக்குதல் நடந்துள்ளது.சூட்டுக் காயங்களுடன் கைதான தாக்குதலாளி மருத்துவ மனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட் டுள்ளார். சிறிய கைக்கோடரி மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்தது.
இந்த சம்பவம் பயங்கரவாத நோக்கத் துடன் தொடர்புடைய தாக்குதல் எனச் சந்தேகிக்கப்படுகிறது. எனினும் அது உடனடியாக உறுதிப்படுத்தப்படவில்லை. கொலை முயற்சி என்ற கோணத்தி லேயே விசாரணைகள் முன்னெடுக்கப் படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுவீடனின் பிரதமர் Stefan Lofven அதனை ஒரு கொடூரமான செயல் என்று கூறி தனது கண்டனத்தை வெளியிட்டி ருக்கிறார்.சுவீடனில் பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் இன்னமும் உயர்ந்த அளவில் காணப்படுவதாக அந்நாட்டின் புலனாய்வுப் பிரிவு நம்புகின்றது.
2010,2017ஆம் ஆண்டுகளில் அங்கு இரண்டு தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன.2017 ஏப்ரலில் தலைநகர் Stockholm அருகே பொதுமக்கள் மீது நபர் ஒருவர் வாகனத்தை மோதித் தாக்கியதில் ஐவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. #சுவிடனில் #கூரிய_ஆயுதத்தால் #இளைஞர் #பயங்கரவாதச்_செயல் #Vetlanda
-------------------------------------------------------------------
குமாரதாஸன். பாரிஸ்.04-03-2021
{{retweet_count}}{{favorite_count}} -
அல்ஜீரிய விடுதலைப்போரின் போது தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்ட புரட்சிப்படைப் போராளி அலி பூமென்ட்ஜலை (Ali Boumendjel) பிரெஞ்சு இராணுவம் சித்திரவதை செய்தே கொன்றது என்பதை அதிபர் எமானுவல் மக்ரோன் ஒப்புக்கொண்டுள்ளார்.
பிரபல சட்டத்தரணியும் அல்ஜீரிய விடுதலை இயக்கத்தின் முன்னணி செயற்பாட்டாளருமாகிய அலி பூமென்ட்ஜலின் பேரப் பிள்ளைகளை மக்ரோன் நேற்று செவ்வாய்க்கிழமை எலிஸே மாளிகைக்கு அழைத்துச் சந்தித்தார். அச்சமயம் "அலி தற்கொலை செய்து கொள்ளவில்லை. பிரெஞ்சுப் படையினரால் சித்திரவதை செய்தே கொல்லப்பட்டார்" என்பதை குடும்பத்த வர்களிடம் நேரில் தெரிவித்தார் என்று எலிஸேயின் செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
"அல்ஜியர்ஸ் போரின் நடுவே அலி பிரெஞ்சுப் படைகளால் கைது செய்யப் பட்டார். தனிமைச் சிறையில் அடைக்கப் பட்டார். சித்திரவதை செய்யப்பட்டார். பின்னர் மார்ச் 23, 1957 அன்று படு கொலை செய்யப்பட்டார்" - என்று எலிஸே மாளிகையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தையும் யுத்த வடுக்களையும் அகற்றும் முயற்சியாக உண்மைகளை வெளிக்கொணர்தல், ஒப்புக்கொள்ளல் போன்ற இருதரப்பு நல்லிணக்கச் செயற்பாடுகளை அல்ஜீரிய அரசுடன் இணைந்து அதிபர் மக்ரோன் மேற்கொண்டு வருகிறார்.
அதற்காக உண்மை அறியும் ஆணைக்குழு ஒன்றை அவர் அமைத்திருந்தார். அல்ஜீரிய சுதந்திரப் போர் தொடர்பான வரலாற்றை இரு தரப்புகளும் முகத்துக்கு நேரே பார்த்து உண்மைகளை வெளிக் கொண்டு வருவது என்ற மக்ரோனின் வாக்குறுதிகளில் ஒன்றாகவே அலி பூமென்ட்ஜலின் படுகொலையை பிரான்ஸ் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளது.
அலி பூமென்ட்ஜலின் அல்ஜீரிய மக்களால் மிகவும் மதிக்கப்படுகின்ற சுதந்திரப் போராட்ட வீரர்களில் முக்கியமானவர் ஆவார். 1957 இல் அங்கு புரட்சியை ஒடுக்க முற்பட்ட பிரெஞ்சுப் படைகள் கிளர்ச்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் அவரைக் கைது செய்தன. கடுமையான சித்திரதைக்குப் பின்னர் அவர் தடுத்துவைக்கப்பட்டிருந்த கட்டடத்தின் ஆறாவது மாடியின் ஜன்னல் வழியே வீசப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவே பிரான்ஸ் படை அறிவித்தது. பிரான்ஸின் காலனித்துவ நாடான அல்ஜீரியாவில் கிளர்ச்சியை ஒடுக்கிய படை நடவடிக்கைக்குத் தலைமை வகித்த முக்கிய பிரெஞ்சுப்படைத் தளபதியான ஜெனரல் போல் ஆஸ்ஸாரெஸ் (Paul Aussaresses) 2001 இல் எழுதி வெளியிட்ட நினைவு நூல் ஒன்றில் அலி தற்கொலை செய்யவில்லை. சித்திரவதை செய்தே கொல்லப்பட்டார் என்ற தகவலைப் பதிவு செய்திருந்தார்.அலியின் படுகொலையை பிரான்ஸ் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் பல தசாப்தங்களாகக் கோரி வந்தனர்.
அல்ஜீரியா பிரான்ஸின் காலனித்து வத்தில் இருந்து போராடி விடுபட்டு சுதந்திர நாடாக மாறியதன் அறுபதாவது ஆண்டுக் கொண்டாட்டங்கள் அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ளன.பிரான்ஸின் அல்ஜீரிய காலனித்துவ ஆக்கிரமிப்பை "மானுடத்துக்கு எதிரான குற்றம்" (crime against humanity) என்று அதிபர் மக்ரோன் தனது தேர்தல் பிரசாரத்தின் போது அறுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (படம் : அலி பூமென்ட்ஜலின் நிழல் படம் அருகே அவரது மனைவியான மலிகா பூமென்ஜலின்) #அல்ஜீரிய_சுதந்திரப்போராளி #பிரெஞ்சுப்படை #எலிஸே_மாளிகை #தற்கொலை #Ali_Boumendjel #மக்ரோன்
--------------------------------------------------------------------
குமாரதாஸன். பாரிஸ்.03-03-2021
{{retweet_count}}{{favorite_count}} -
பிரான்ஸில் லஞ்ச ஊழல் வழக்கு ஒன்றில் முன்னாள் அதிபர் நிக்கலஸ் சார்க்கோஷிக்கு இரண்டு ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட மூன்றாண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப் பட்டிருக்கிறது.
நிக்கலஸ் சார்க்கோஷி தனக்கு எதிரான வழக்கு ஒன்றில் நீதிபதி ஒருவருக்கு லஞ்சம் வழங்குவதற்குத் தனது சட்டத்தரணி மூலம் முயற்சித்தார் என்று கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் மீதான விசாரணைகளின் முடிவிலேயே இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த வலதுசாரி அரசியல்வாதியான சார்க்கோஷி, "செய்வது தவறு எனத் தெரிந்தே(குற்றம்)செய்திருக்கிறார்" என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட் டுள்ளார். அதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் "நீதித்துறை பற்றிய தப்பான தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது" எனவும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
சார்க்கோஷி தனது சிறைக் காலத்தில் ஓராண்டை இலத்திரனியல் காவல் காப்புடன் (electronic bracelet) வீட்டில் இருந்தே கழிக்க முடியும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார். ஆயினும் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்வதற்கு சார்க்கோஷிக்கு அவகாசம் உள்ளது.
தீர்ப்புக்கு எதிரான அவரது மேன்முறை யீடுகள் நிராகரிக்கப்பட்டால் பிரான்ஸில் வழக்கு விசாரணை ஒன்றில் காவலு டனான தண்டனையைப் பெறுகின்ற (custodial sentence) முதலாவது முன்னாள் அதிபராக அவர் கருதப்படுவார். 66 வயதுடைய சார்க்கோஷி 2007 முதல் 2012 வரை அதிபர் பதவியில் இருந்தவர். அவரது தேர்தல் பிரசாரக் காலத்திலும் பின்னர் பதவிக் காலத்திலும் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற லஞ்ச ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பான சில வழக்குகளில் அவர் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார்.
2007 இல் சார்க்கோஷி தனது தேர்தல் பிரசாரத்துக்காக பிரான்ஸின் பிரபல செல்வந்தச் சீமாட்டியான லிலியன் பெத்தான்கூவிடம் (Liliane Bettencourt) இருந்து முறைகேடாக நிதி உதவி பெற்றார் எனக் கூறப்படும் ஒரு குற்றச்சாட்டுத் தொடர்பாக விசாரணை கள் நடைபெற்று வந்தன. அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நீதிபதி ஒருவருக்கு தனது சட்டவாளருடன் சேர்ந்து ரகசியமாக லஞ்சம் கொடுக்க முயன்றார் என்று கூறப்படுகின்ற பிறிதொரு வழக்கி லேயே இன்று அவருக்குச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.
செல்வாக்கான பதவி ஒன்றை வழங்குவது தொடர்பாக சார்க்கோஷி யின் சட்டத்தரணி நீதிபதியுடன் ரகசிய மாக நடத்திய தொலைபேசி உரையா டலின் பதிவு பொலீஸாரிடம் சிக்கியதை அடுத்தே இந்த விவகாரம் அம்பலமானது.சார்க்கோஷியுடன் அந்த லஞ்ச பேரத்தில் சம்பந்தப்பட்ட நீதிபதி மற்றும் சட்டத்த ரணி ஆகியோருக்கும் இன்று சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பிரான்ஸில் ஜக் சிராக்கிற்குப் (Jacques Chirac) பிறகு நீதிமன்றம் ஒன்றினால் சிறைத் தண்டனை விதிக்கப்படுகின்ற முன்னாள் அதிபர் சார்க்கோஷி ஆவார்.ஜக் சிராக் பாரிஸ் நகர மேயராக இருந்த சமயத்தில் தனது கட்சிக்கு நிதி சேகரிப்ப தற்காகப் போலியான பதவிகளை உருவாக்கினார் என்று குற்றஞ்சாட்டப் பட்ட வழக்கில் அவருக்கு இரண்டு வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது.ஆனால் அவரது உடல் நிலை காரணமாக விசாரணைகளில் சமூகமளிப்பதில் இருந்து அவருக்கு விலக்களிக்கப்பட்டது. #லஞ்ச_ஊழல் #சார்க்கோஷி #சிறைத்தண்டனை #பிரான்ஸில்
-------------------------------------------------------------------
குமாரதாஸன். பாரிஸ்.01-03-2021
{{retweet_count}}{{favorite_count}}
Fashion
Travel
Technology
Latest Articles
இலங்கை – பங்களாதேஷ் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
இலங்கைக்கும், பங்களாதேஷிற்கும் இடையிலான இரு தரப்பு...
சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காதவரை அதற்காகப் போராடுவோர் பாதிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பர்!
ஐ.நா மனித உரிமைகன் பேரவையின் 46வது கூட்டத்தொடரில்...
நாட்டில் நடைமுறையில் உள்ள கொரோனா சுகாதார விதிகளை மீறி...
நாடாளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் மலையக மக்கள்...
“HRC இன் தீர்மானத்திற்கு ஆதரவாக புதுடெல்லி வாக்களிக்கும்” ஈடேறுமா சுமந்திரனின் எதிர்பார்பு!
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித...
குற்றச்சாட்டுகளில் இருந்து, பிரியங்கவை, இங்கிலாந்து உயர் நீதிமன்றம் விடுவித்தது!
லண்டனில் உள்ள இலங்கைக்கான உயர் ஸ்தானிகராலயத்தின்...
தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக்...
அரச பணியாளர்கள், ஊடகத்துறையில் – தவறான செய்திகளால் முதலீடுகள் தவிர்ப்பு – சார்ள்ஸ் குற்றச்சாட்டு!
ஊடக அமைச்சின் கீழ் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய...
அயோத்தி ராமர் கோயிலுக்கு இலங்கை அசோக வனத்தில் இருந்து கல் – ராமாயண தொடர்பு! இலங்கை+இந்தியா!
இந்தியாவின் அயோத்தி ராமர் கோயிலுக்கான புனிதமாகக்...