Home இலங்கை முல்லைத்தீவில் புலிகளின் ஆவணங்களைத் தேடி அகழ்வு :

முல்லைத்தீவில் புலிகளின் ஆவணங்களைத் தேடி அகழ்வு :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காவல்துறை  பிரிவிற்கு உட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் தனிநபர் ஒருவரின் காணிக்குள் இன்று நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக தோண்டும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்து நீதிமன்றின் அனுமதி பெறப்பட்டு இந்த அகழ்வு நடவடிக்கை இன்று காலை இடம்பெற்றது.

இதன்போது நீதிமன்ற பதிவாளர் மற்றும் காவல்துறையினர் , படையினர் ,தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள்இபிரதேச செயலக அதிகாரிகள் ,கிராம அலுவலகர் ஆகியோர் முன்னிலையில் குறித்த காணிப்பகுதியில் தோண்டப்பட்ட போதும் எதுவித பொருட்களும் அங்கிருந்து மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது #mullaitheevu #puthukudiyiruppu #ltte #documents

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More