Home இலங்கை அமெரிக்க பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி

அமெரிக்க பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி

by admin

 

இந்திய சமுத்திரத்தில்  சுதந்திரமாக  கடல் பயணத்தை  மேற்கொள்ள இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமெரிக்க பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளார். அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் வர்மாவை  ஜனாதிபதி செயலகத்தில்  சந்தித்த போதே ஜனாதிபதி  இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

மேலும் இந்த சந்திப்பின் போது சர்வதேச பாதுகாப்பு தொடர்பான விடயங்களும்   கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது  செங்கடலில் இடம்பெறும் கடற்படை நடவடிக்கைகளுக்கு  இலங்கை அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்கு பிரதி இராஜாங்க செயலாளர்  ஜனாதிபதியிடம்  நன்றி தெரிவித்துள்ளார்.   ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு  சென்ற  நான்காவது அமெரிக்க பிரதிநிதி ரிச்சர்ட் வர்மா என்பது  குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More