Home இலங்கை அரசியல்வாதிகளை அல்ல மக்களை நம்பியே பிள்ளைகளுக்காக போராடுகின்றோம் – காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க பிரதிநிதி லீலாதேவி:-

அரசியல்வாதிகளை அல்ல மக்களை நம்பியே பிள்ளைகளுக்காக போராடுகின்றோம் – காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க பிரதிநிதி லீலாதேவி:-

by admin

நாம் இனியும் அரசில்வாதிகளை நம்பத் தயாராக இல்லை எங்களுடைய மக்களை நம்பியே போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம் என கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் பிரதிநிதி ஆன்நத நடராஜா லீலாதேவி தெரிவித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சி சந்தை வர்த்தகர்கள் ஊர்வலமாக சென்று கலந்துகொண்டனர் இதன் போது அவர்களுக்கு நன்றி தெரிவித்து கருத்துதெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

காணாமல் ஆக்கப்பட்ட எங்களுடைய பிள்ளைகளுக்கும் உறவுகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்க வேண்டும், அத்தோடு விரைவான தீர்வாக அது கிடைக்க வேண்டும் என்பதோடு,இலங்கை அரசுக்கு பொறுப்பு கூறல் விடயத்தில் ஜநா கால நீடிப்பு வழங்க கூடாது என்பதனையும் வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றோம். எங்களது இந்தப் போராட்டத்திற்கு நாம் அரசியல்வாதிகளை நம்பியிருக்கவில்லை அவர்கள் விரும்பினால் எங்களது போராட்டத்தில் கலந்துகொள்ளலாம் அது அவர்களுடைய விருப்பம். ஆனால் நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கான இந்தப் போராட்டத்திற்கு மக்களின் ஆதரவையே பெரிதும் நம்பியிருகின்றோம் எனவே இன்று சந்தை வர்த்தகர்கள் வந்து கலந்துகொண்டு ஆதரவும் தெரிவித்தது போன்று ஏனைய அமைப்பகள் மற்றும் பொது மக்களின் ஆதரவையே நம்பியிருகின்றோம் எனத் தெரிவித்த அவர்

இந்த தொடர் போராட்டத்திற்கு விரைவில் நல்ல தீர்வு கிடைக்காது விட்டால் எங்களது போராட்ட வடிவங்கள் மாறும் எனவும் லீலாதேவி மேலும் குறிப்பிட்டார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More