Home இலங்கை இடைநிறுத்தப்பட்ட வேலைவாய்ப்பு திட்டத்தை உடனடியாக செயற்படுத்த தீா்மானம்

இடைநிறுத்தப்பட்ட வேலைவாய்ப்பு திட்டத்தை உடனடியாக செயற்படுத்த தீா்மானம்

by admin

பொதுத் தேர்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட, ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்படவிருந்த வேலைவாய்ப்பு திட்டத்தை உடனடியாக செயற்படுத்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தொிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வேலையற்ற பட்டதாரிகளின் பெயர் பட்டியல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (16) ஜனாதிபதி செயலகத்தின் இணையத்தளத்தில் வௌியிடப்படவுள்ளதாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான நியமனக்கடிதம் அனுப்பும் செயற்பாடு எதிர்வரும் திங்கட்கிழமை (17) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வும் தொிவிக்கப்பட்டுள்ளது

நியமனம் பெற்றவர்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி தமக்குரிய பிரதேச செயலகத்திற்கு வர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகுதிபெற்ற பட்டதாரிகளின் பெயர், பட்டியலில் உள்ளடங்காவிடின் ஜனாதிபதி செயலகத்திற்கு அழைப்பெடுத்து கேட்க முடியும் டினவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் பணிகள் எதிர்வரும் செப்டம்பர் 01 ஆம் திகதி முதல் அதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள செயலணியினால் செயற்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. #தேர்தல் #இடைநிறுத்தப்பட்ட #வேலைவாய்ப்பு #வேலையற்றபட்டதாரிகள்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More