Home இலக்கியம் இரைகின்றன விரைகின்றன இயந்திரங்கள் – சி.ஜெயசங்கர்

இரைகின்றன விரைகின்றன இயந்திரங்கள் – சி.ஜெயசங்கர்

by admin

இரைகின்றன விரைகின்றன இயந்திரங்கள்

ஏலேலோ ஐலசா ஏலேலோ

வயல்வெளிகளில் கடற்கரைகளில்

இரைகின்றன விரைகின்றன இயந்திரங்கள்

மனிதர்களை வெளியேற்றும் இயந்திரங்கள்

ஏலேலோ ஐலசா ஏலேலோ

அம்பாப் பாட்டும் அருவிவெட்டும்  ஆவணத்தில்

அதைப் பாடும் மனிதரெல்லாம் கோவணத்தில்

வயல்வெளிகளில் கடற்கரைகளில்

இரைகின்றன விரைகின்றன இயந்திரங்கள்

ஏலேலோ ஐலசா ஏலேலோ

கதிர்பொறுக்கும் மனிதருக்கு கஞ்சியில்லை

இரைதேடும் பறவைகட்கும் எதுவுமில்லை

அதைத் துரத்தும் சிறுவருக்கும் மகிழ்ச்சியில்லை

இரைகின்றன விரைகின்றன இயந்திரங்கள்

ஏலேலோ ஐலசா ஏலேலோ

கரைவலையில் கடற்கரையில் மனிதரில்லை

கைவைத்து இழுவைபோடும் தேவையில்லை

மனிதருக்கும் மற்றவைக்கும் பங்குமில்லை

இரைகின்றன விரைகின்றன இயந்திரங்கள்

ஏலேலோ ஐலசா ஏலேலோ

எமது கடல் எமது வயல் எமதுழைப்பு

எவருக்கோ எங்கேயோ போகிறதே?!

எமது கடல் எமது வயல் எமதுழைப்பு

இறுமாந்த எம் வாழ்வு தொலைகிறதே?!

இரைகின்றன வரைகின்றன இயந்திரங்கள்

ஏலேலோ ஐலசா ஏலேலோ

நரைமுகிலும் திரைகடலும் நீங்கிச் சென்று

உறைபனியில் எரி வெயிலில் துவள்கிறதே

துவள்கிறதே துவள்கிறதே எம வாழ்க்கை

இரைகின்றன விரைகின்றன இயந்திரங்கள்

ஏலேலோ ஐலசா ஏலேலோ

மனிதரற்ற வயல்வெளிகள் இரைகின்றன

மனிதரற்ற கடற்கரைகள் இரைகின்றன

மனிதமற்ற வாழ்கைமுறை இரைகின்றன

இரைகின்றன விரைகின்றன இயந்திரங்கள்

ஏலேலோ ஐலசா ஏலேலோ

 சி.ஜெயசங்கர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More