Home இலங்கை இறக்காமம் குறித்து ஆராய குழு நியமனம் – இறுதி அறிக்கை வரும் யாரும் எந்தவொரு செயற்பாட்டையும் முன்னெடுக்க முடியாது :

இறக்காமம் குறித்து ஆராய குழு நியமனம் – இறுதி அறிக்கை வரும் யாரும் எந்தவொரு செயற்பாட்டையும் முன்னெடுக்க முடியாது :

by admin

கிழக்கு மாகாண சபையால் நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை வரும் வரை  இறக்காமம் மாயக்கல்லி மலையில் யாருக்கும் எந்தவொரு செயற்பாட்டையும் முன்னெடுக்க முடியாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அறிவித்துள்ளார்.

மாயக்கல்லி மலையில்  இடம்பெறுகின்ற அத்துமீறல்கள் தொடர்பாக  மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் கொண்டு வந்த பிரேரணையை ஆதரித்து நிறைவேற்றி உரையாற்றும் போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன் மாயக்கல்லி மலையில் இடம்பெறுகின்ற அத்துமீறல்கள் தொடர்பில் ஆராய கிழக்கு  முதலமைச்சர் தலைமையில்  அம்பாறை மாவட்ட மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளடங்கலாக குழுவொன்றை நியமிக்க கிழக்கு மாகாண சபை ஏகமனதாக தீர்மானித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் கிழக்கு மாகாண காணியமைச்சர்,அம்பாறை மாவட்ட மாகாண சபை உறுப்பினர்கள், காணி ஆணையாளர்,அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்,அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்,இறக்காமம் பிரதேச செயலாளர்,பிரதேச சபையின் செயலாளர், தமன பொலிஸாரும் இந்தக் குழுவில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More