Home இலங்கை உணவு பொதியை மிரட்டி பறித்ததாக காவல்துறையினருக்கு எதிராக முறைப்பாடு!

உணவு பொதியை மிரட்டி பறித்ததாக காவல்துறையினருக்கு எதிராக முறைப்பாடு!

by admin

உணவு விநியோகம் செய்ய சென்ற ஊழியரை மறித்து அவரிடமிருந்த இரண்டு உணவு பொதிகளை இன்றைய தினம் இரவு  சுன்னாகம் காவல்துறையினர் மிரட்டி கொள்ளையிட்டுள்ளதாக சுன்னாகம் காவல் நிலையத்திலையே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 


மருதனார் மடம் சந்திக்கு அருகில் சீருடையுடன் , காவல்துறை வாகனத்தில் நின்றிருந்த சுன்னாகம் காவல்நிலையத்தை சேர்ந்த காவல்துறையினரே இந்த உணவு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் என குற்றம் சாட்டப்படுகிறது. 


குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,  சாவகச்சேரி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஒருவர் உணவு பெற்றுக்கொள்ள தொலைபேசி ஊடாக பதிவு (ஓடர்) செய்துள்ளார். அவருக்கான உணவினை விநியோகம் செய்வதற்காக குறித்த உணவாக ஊழியர் சென்ற போது , மருதனார் மடம் சந்திக்கு அருகில் குறித்த ஊழியரை வழிமறித்த சீருடை அணிந்த காவல்துறை உத்தியோகஸ்தர்கள் அவரிடம் இருந்த  இரண்டு உணவு பொதிகளை அவரை மிரட்டி கொள்ளையடித்து சென்றுள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பில் ஊழியரினால் , உணவாக உரிமையாளருக்கு தெரியபப்டுத்தியதை அடுத்து , அவர் சுன்னாகம் காவல் நிலையத்திற்கு தொலைபேசி ஊடாக முறைப்பாடு செய்துள்ளார்.  தனது முறைப்பாட்டுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தான் இது குறித்து உயர் காவல்துறை அதிகாரிகளிடமும் முறையிடுவேன் எனவும் தெரிவித்துள்ளார். 


இதேவேளை குறித்த உணவாக உரிமையாளர் சுன்னாகம் காவல் நிலையத்தில் தொலைபேசி ஊடாக முறைப்பாடு செய்யும் தொலைபேசி உரையாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More