Home இலங்கை உதயனிடம் 500 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு கோரி சிவநேசன் மானநஷ்ட வழக்கு தாக்கல் :

உதயனிடம் 500 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு கோரி சிவநேசன் மானநஷ்ட வழக்கு தாக்கல் :

by admin

சிவராம்-தராக்கியின் கொலையுடன் உதயன் பத்திரிகை தன்னைத் தொடர்புபடுத்தி, தன்னுடைய கௌரவத்துக்கு பங்கம் விளைவிப்பதாக தெரிவித்து வடக்கு மாகாண அமைச்சர் கந்தையா சிவநேசன் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.   வடக்கு  மாகாண விவசாயம், கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சர் கந்தையா சிவநேசன் சார்பாக அவருடைய சட்டத்தரணி 500 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு கோரி கோரிக்கைக் கடிதம் ஒன்றினை உதயன் பத்திரிகைக்கு அனுப்பிவைத்துள்ளார்.

சட்டத்தரணி தனது கடிதத்தில்,

சிவராம்-தராக்கியின் கொலையுடன் உதயன் பத்திரிகை தன்னைத் தொடர்புபடுத்தி, தன்னுடைய கௌரவத்துக்கு பங்கம் விளைவிப்பதாக எனது கட்சிக்காரர் உங்களிடம் 500 மில்லியன் ரூபாய் நஸ்டஈடு கோரியிருக்கின்றார்.   ஆகவே, ஒரு மாத காலத்திற்குள் நஷ்டஈட்டு தொகையினை தாங்கள் செலுத்தத் தவறும் பட்சத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவித்திருக்கின்றார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More