Home இந்தியா இணைப்பு 2 – உத்தரப்பிரதேச அனல் மின் நிலைய விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு

இணைப்பு 2 – உத்தரப்பிரதேச அனல் மின் நிலைய விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு

by admin

 

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின், ரேபரேலி மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய அனல் மின் நிலையத்தில் (என்டிபிசி) ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விபத்தில் 17 பேர் அனல் மின் நிலையத்தில் இறந்துள்ளனர். மேலும், காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 பேர் இறந்துள்ளனர். இவை தவிரவும் இந்த விபத்தில் பலருக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

உத்தரப்பிரதேசத்தில் அனல் மின்நிலைய கொதிகலன் வெடித்து  ஏற்பட்ட விபத்தில்  14 தொழிலாளர்கள்  உயிரிழப்பு


இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின்  ரேபரேலியில்  மத்திய அரசுக்கு சொந்தமான   அனல் மின்நிலைய கொதிகலன் வெடித்து  ஏற்பட்ட விபத்தில்  14 தொழிலாளர்கள்  உயிரிழந்துள்ளனர்.   இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக  முதற்கட்ட தகவல் வெளியாகியிருந்ததுடன் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில்    சிகிச்சைக்காக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில்  சிகிச்சை பலனின்றி மேலும், 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More