Home இலங்கை எந்தவொரு நாடும் இலங்கையை கட்டுப்படுத்தவில்லை – அரசாங்கம்

எந்தவொரு நாடும் இலங்கையை கட்டுப்படுத்தவில்லை – அரசாங்கம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

எந்தவொரு நாடும் இலங்கையை கட்டுப்படுத்தவில்லை எனவும் அதற்கு இடமளிக்கப்படவில்லை எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. உலகின் அனைத்து நாடுகளுடனும் அரசாங்கம் சிறந்த ராஜதந்திர உறவுகளை பேணி வருவதாக கனிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

எனினும், எந்தவொரு நாடும் இலங்கை மீது ஏதேச்சாதிகாரத்தைப் பயன்படுத்த இடமளிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் நாட்டு மக்களுக்கு எது முக்கியமானது என்பதனை அரசாங்கம் தீர்மானிக்குமே தவிர, வெளிச் சக்திகளின் தலையீட்டுக்கு இடமளிக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின் கீழான கொள்கைகளினால் அனைத்து நாடுகளுடனும் சிறந்த உறவுகளைப் பேணுவதற்கு வழியமைத்துள்ளதாகவும் எந்தவொரு நாட்டுனும் இலங்கை கோப்படவில்லை எனவும், விரோதம் பாராட்டவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More