Home இலங்கை என்.சிறிகாந்தா தலைமையில் புதியகட்சி

என்.சிறிகாந்தா தலைமையில் புதியகட்சி

by admin


தமிழீழ விடுதலை இயக்கத்தின் கட்சியின் பொதுச் செயலாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி எனும் புதுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலின் போது  தமிழீழ விடுதலை இயக்கம்  எடுத்த முடிவுக்கு முரணாகச் செயற்பட்டனர் எனத் தெரிவித்து என்.சிறிகாந்தா உள்ளிட்ட சிலர் கட்சியிருந்து  நீக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு நீக்கப்பட்டவர்களே இவ்வாறு புதிய கட்சியினை ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன் முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் இணைந்து உருவாக்கும் கூட்டு அணியுடன் இணைந்து பயணிக்க தமது புதிய கட்சி தயாராக இருப்பதாக என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  #சிறிகாந்தா  #தமிழ்த் தேசியக்கட்சி  #ரெலோ

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More