Home இலங்கை கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி மக்கள் விசேட அதிரடிப்படையினரிடம் உதவி கோரினர்…

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி மக்கள் விசேட அதிரடிப்படையினரிடம் உதவி கோரினர்…

by admin

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி மக்கள் தங்களின் பிரதேசங்களில் இடம்பெறும பாரியளவிலான சட்டவிரோத மணல் அகழ்வினை தடுத்து நிறுத்த விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கையில் இறங்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக பளை பிரதேசத்தின் பல இடங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு இரவு பகலாக இடம்பெற்று வருகிறது. காவல்துறையினரின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை எனவும் பல சந்தர்ப்பங்களில் காவல்துறையினரின் துணையுடன் மணல் அகழ்வு இடம்பெறுகிறது எனவும்ம் தெரிவிக்கும் பிரதேச மக்கள் இதனை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினரே தேவை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

பளை பிரதேசத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வினை தடுத்து நிறுத்தாது விடின் குறுகிய சில வருடங்களில் பளை முழுவதும் உவராக மாறிவிடும் எனவும் பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More