Home இலங்கை கேப்பாப்பிலவு காணியை விடுவிக்க ராணுவம் கோரிய பணம் கையளிக்கப்பட்டுள்ளது – விரைவில் காணி விடுவிக்கப்படும்

கேப்பாப்பிலவு காணியை விடுவிக்க ராணுவம் கோரிய பணம் கையளிக்கப்பட்டுள்ளது – விரைவில் காணி விடுவிக்கப்படும்

by admin


கேப்பாப்பிலவு இராணுவ முகாமினை மாற்றுவதற்காக இராணுவம் கோரியிருந்த 5 மில்லியன் ரூபா பாதுகாப்பு அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக  சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் உள்ள காணிகள் விடுவிப்பு தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தில் குறித்த  முகாமினை அகற்றுவதற்கு இராணுவம் 5 மில்லியன் ரூபாவினைக் கேட்டிருந்ததாகவும்  அதனடிப்படையில் குறித்த பணம் தற்போது  கையளிக்கப்பட்டுள்ளதால் விரைவில் கேப்பாப்பிலவு காணிகள் விடுவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன்  காணிகள் விரைவாக விடுவிப்பது தொடர்பில்  விரைவில்  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவைச் சந்திக்க உள்ளதாகவும்  ஏற்கனவே நாம் கூறியபடி முள்ளிக்குளம் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன எனவும்  டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

1 comment

Kumarakuruparan.v May 15, 2017 - 8:16 am

தரமான செய்திகளின் இருப்பிடம் குளோபல் செய்திகளே தொடா்க பணி

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More