Home இலங்கை கொலைக்களம் ஆவணப்படத்தை திரையிட்ட மனித உரிமை செயற்பட்டாளருக்கு மலேசியாவில் அபராதம்

கொலைக்களம் ஆவணப்படத்தை திரையிட்ட மனித உரிமை செயற்பட்டாளருக்கு மலேசியாவில் அபராதம்

by admin


இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தை திரையிட்டமைக்காக மலேசிய மனித உரிமை செயற்பாட்டாளரான லீனா ராசாத்தி ஹென்றிக்கு மலேசிய நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. கோலாலம்பூர் நீதவான் நீதிமன்றத்தினால் இவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

செனல்4 தொலைகாட்சியின் இலங்கையின் கொலைகளம் ஆவணப்படத்தை திரையிட்டமைக்காக அவர் கடந்த 2013ம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார். மலேசிய திரைப்படத் தணிக்கை குழுவின் அனுமதி இன்றி, குறித்த ஆவணப்படத்தை காட்சிப்படுத்தியதாக தெரிவித்து, அவருக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டு கோலாலம்பூர் நீதவான் நீதிமன்றத்தில் கடந்த பெப்ரவரி 21ம் திகதி இவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. அபராதம் செலுத்தப்படாவிட்டால் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More