Home இலங்கை சட்டத்தரணிகள் அணி உருவாக்கம்

சட்டத்தரணிகள் அணி உருவாக்கம்

by admin

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனின் எற்பட்டில் சட்டத்தரணிகள் சந்திப்பு நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

யாழ்ப்பாணம் தனியார் விடுதியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. அதில் கலந்து கொண்ட சட்டத்தரணிகள் மணிவண்ணனுடன் தொடர்ந்தும் இணைந்து பயணிப்பதற்கு தமது முழுமையான ஆதரவை தெரிவித்தனர்.

இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு என்று சட்டத்தரணிகள் அணி ஒன்று அமைக்கப்படுவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
அதன் போது, தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சட்டரீதியான பிரச்சனைகளை கையாள்வதற்கு சட்டத்தரணிகள் அணியை உருவாக்குவதற்கும் அதில் இணைந்து பயணிப்பதற்கும் அனைவராலும் தீர்மானிக்கப்பட்டது.

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் சிவகுரு இளங்கோவும் கலந்து கொண்டார் #சட்டத்தரணிகள்அணி #உருவாக்கம் #தமிழ்த்தேசியமக்கள்முன்னணி #மணிவண்ணன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More