Home இலங்கை சனத் ஜயசூரிய இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு எழுதிய உருக்கமான கடிதம் :

சனத் ஜயசூரிய இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு எழுதிய உருக்கமான கடிதம் :

by admin

இலங்கை அணியின் தொடர் தோல்விகளால் ரசிகர்கள் குழப்பங்களில்  ஈடுபட்டதையடுத்து  இலங்கை கிரிக்கட் தெரிவுக் குழு தலைவர் சனத் ஜயசூரிய உள்ளிட்ட தெரிவுக்குழு உறுப்பினர்கள்  பதவி விலகியுள்ள நிலையில்  சனத் ஜயசூரிய இலங்கை கிரிக்கெட்  கட்டுப்பாட்டு சபைக்கு உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.

அதில் என் இருதயத்தில் துயரத்தைத் தாங்கி இந்தக் கடிதத்தை எழுதுகிறேன், சக தேர்வாளர்களுடன் நீண்ட நேரம் ஆலோசித்த பின்னர் நாங்கள்  பதவி விலகுவதென  ஏகமனதாக முடிவெடுத்தோம்.

நாட்டை பலமட்டங்களிலும் பிரதிநிதித்துவம் செய்த வீர்ர், முன்னாள் அணித்தலைவர் ,  நடப்பு தேர்வுக்குழு  தலைவர்  என்ற அடிப்படையில், கடந்த ஞாயிறன்று மைதானத்தில் நடந்தது கடைசியாக இருக்கட்டும் என்று நினைத்தோம், கிரிக்கெட் எப்போதும் என் வாழ்க்கையாகவே இருந்து வருகிறது. எனவே நம் ரசிகர்களே நம் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது மிகவும் வலிதருவதாக இருக்கிறது.

இந்த ஆண்டு மோசமாக அமைந்தது என்பதை ஏற்றுக் கொள்கிறோம், ஆனால் ஓராண்டுக்கு முன்பாகத்தான் அவுஸ்திரேலியாவை 3-0 என்று வீழ்த்தினோம். அது மறக்க முடியாத ஒரு கணம். திறமையான வீரர்கள் பலர் இந்த அணியில் உள்ளனர், நிச்சயம் இவர்கள் அணியை உச்சத்துக்கு இட்டுச் செல்வார்கள். இலங்கை கிரிக்கெட்டுக்காக தேவை ஏற்படும்போது எப்போது வேண்டுமானாலும் உதவத் தயாராக இருக்கிறோம்.

1996 (உலகக்கோப்பை வெற்றி) வீரர்கள் எப்போதும் இலங்கை கிரிக்கெட்டின் அபாரமான நாட்களை ஏக்கத்துடன் நினைவு கூர்கிறோம். எங்களுக்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதுடன்  கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைத் தலைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

கடைசியாக அணியினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் எங்கள் கண்களில் நீர் நிரம்ப விடைபெறுகிறோம், ஆனால் எங்கள் தலை நிமிர்ந்துதான் உள்ளது. அனைத்து ரசிகர்களிடத்திலும் நான் கேட்டுக் கொள்வதெல்லாம் வீரர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். இந்த வீரர்கள் நிச்சயம் வெற்றிக்கு இட்டுச் செல்வார்கள்.

வீரர்களுக்கு நாங்கள் கூறுவதெல்லாம், உங்கள் திறமைகளில் நம்பிக்கை வையுங்கள். ரசிகர்களிடத்தில் நம்பிக்கை வையுங்கள். அவர்கள் உங்களுடன் தான் இருக்கப் போகிறார்கள். ஒரு அணியாக, ஒருநாடாக நாம் திரண்டு மீண்டெழுவோம் என்ற நம்பிக்கை உள்ள என சனத் ஜயசூரிய தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More