Home இலங்கை சர்வதேசத்தின் தீர்வு கிடைக்கும் வரை இவ்விடத்தில் நின்று போராடிக் கொண்டிருப்போம்

சர்வதேசத்தின் தீர்வு கிடைக்கும் வரை இவ்விடத்தில் நின்று போராடிக் கொண்டிருப்போம்

by admin

எங்களுக்கு சர்வதேசத்தின் தீர்வு கிடைக்கும் வரை இவ்விடத்தில் நின்று சுழற்சி முறையில் போராடிக்கொண்டிருப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் நாகேந்திரன் தர்சினி தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்று வருகின்ற சுழற்சி முறையில் நடக்கும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இன்று மாலை கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் சுழற்சி முறையில் நடக்கும் உணவு தவிர்ப்பு போராட்டம் 5ஆவது நாளாகவும்   இடம்பெற்று வருகின்றது. மாற்றுக்கட்சியினரின் இன்னல்கள் அவர்களது குழப்பும் செயற்பாடுகளை தந்திரோபாயமாக பாவிக்கின்றார்கள்.

இந்த இடத்தில் இருந்து எம்மை எழுப்புவதற்கு துடிக்கின்றார்கள்.அவர்களுக்கு ஒன்றினை தெரிவிக்க விரும்புகின்றேன்.எவ்வித துயரமோ துன்பமோ இருந்தாலும் இவ்விடத்தினை விட்டு செல்ல மாட்டோம்.

எங்களுக்கு சர்வதேசத்தின் தீர்வு கிடைக்கும் வரை இவ்விடத்தில் நின்று சுழற்சி முறையில் போராடிக்கொண்டிருப்போம்.
அம்பிகை அம்மனின் அருள் கிடைக்க வேண்டி இவ்விடத்தில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து நாடாத்துவோம்.

பாதுகாப்பு தரப்பினர் புலனாய்வு பிரிவினர் நாம் இவ்விடத்திற்கு போராட்டத்திற்காக வந்தபோது எம்மை புகைப்படங்கள் எடுத்தனர்.ஆனால் அவர்கள் எங்கு அனுப்புகின்றார்கள் என்று தெரியவில்லை.

எமது உயிரை துச்சம் என நினைத்து எவருக்கும் பயப்படாமல் இவ்விடத்தில் போராடிக்கொண்டு இருக்கின்றோம்.தமிழ் பேசும் மக்கள் அனைவரும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.எங்களுக்கு ஆதரவு தர வேண்டும்.கட்சிக்கு அப்பால்  தனிப்பட்ட ரீதியில் நாங்கள் போராட்டத்தை நடாத்தி கொண்டு இருக்கின்றோம்.


தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் இப்போரர்டத்தை நடாத்துகின்றது என்ற சிந்தனை தமிழ் பேசும் மக்கள் எவருக்கும் வரக்கூடாது.ஏனெனில் கட்சிக்கு அப்பால் பெண்கள் ஆகிய நாங்கள் தான் இப்போராட்டத்தை நடாத்தி கொண்டு இருக்கின்றோம்.தமிழ் பேசும் ஆண்களாகிய நீங்கள் கட்டாயம்  எமக்கு ஆதரவு தர வேண்டும்.எங்களுக்கு ஊக்கப்படுத்தி கைகொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார். #சர்வதேசத்தின்_தீர்வு #சுழற்சி_முறை #புலனாய்வு பிரிவினர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More