Home இலங்கை சவாலான சூழ்நிலைகளை கையாளும் வகையிலான கல்விதிட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது- சந்திரிகா

சவாலான சூழ்நிலைகளை கையாளும் வகையிலான கல்விதிட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது- சந்திரிகா

by admin


இலங்கையில்  சவாலான சூழ்நிலைகளை கையாளும் வகையிலான   கல்விதிட்டமொன்றை  ஆரம்பிக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் நல்லிணக்க செயலணியின் தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள பெரும் சவாலான சூழ்நிலைகளை ஒற்றுமையுடன் சமாளிக்க வேண்டியுள்ளது எனவும்  அதற்காக எதிர்கால சந்ததியினரை தயார்படுத்தும் வகையில் ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் போன்ற பண்புகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட கல்வித்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது எனவும் இதற்கான ஏற்பாடுகள், நல்லிணக்க செயலணி மற்றும் கல்வி அமைச்சின் புதிய திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் சகோதரத்துவ பாடசாலை அமைப்பு பணிகள், சமய ரீதியிலான நிகழ்வுகள், ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சிகள், உள்ளிட்டவை வழங்கப்பட்டதன் பின்னர் பாடசாலைகளின் உள்ளேயும் இத்திட்டம் கொண்டுவரப்படவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More