Home இலங்கை சிறுபான்மை மக்களை அடக்கி ஆள நினைப்பது  நாட்டை பலவீனப்படுத்தும்

சிறுபான்மை மக்களை அடக்கி ஆள நினைப்பது  நாட்டை பலவீனப்படுத்தும்

by admin

சிறுபான்மை மக்களை அடக்கி ஆள நினைப்பது  நாட்டை பலவீனப்படுத்தும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.  த. இந்து விற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைத் தொிவித்துள்ளார்.

ராஜபக்ஸவினரின்  ஆட்சியால் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதாகவும் இந்த சூழ்நிலையில் இந்தியா வழங்கிவரும்  உதவிகளுக்கு  தனிப்பட்ட முறையில்  நன்றி தெரிவிப்பதாகவும் அவா் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அணிசேராக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில், ராஜபக்ஸக்கள்  குறிப்பிட்ட  ஒரு   நாட்டிற்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்தமையானது ஏனைய நாடுகளின் இலங்கை மீதான பார்வையை விலகச் செய் துள்ளதாகவும் இதனால் நாடு தற்போது பிரச்சினைகளை சந்தித்து வருவதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பெரும்பான்மையாக உள்ளவர்கள் சிறுபான்மையினரை அடக்கி ஆள முயற்சிப்பது ஒரு நாட்டின் கூட்டு பலவீனமாக உள்ளதாகவும் இத்தகையை நடைமுறை ஒருபோதும் இருக்கக்கூடாது எனவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More