Home இந்தியா சிறுமி ஆருஷி கொலை வழக்கில் பெற்றோர் விடுதலை

சிறுமி ஆருஷி கொலை வழக்கில் பெற்றோர் விடுதலை

by admin


14 வயதுச் சிறுமி ஆருஷி கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறுமியின் பெற்றோரை விடுதலை செய்து அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமி ஆருஷி மற்றும் பணியாளர் ஆகியோரை  சிறுமியின் பெற்றோர்தான்  கொலை செய்தனர் என்பதை சிபிஐ நிரூபிக்க முடியவில்லை எனவுமட  கொலை செய்ததற்கான ஆதாரங்களும் சரியாக இல்லை எனவும் தெரிவித்த நீதிமன்றம்   அவர்களை  விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

டெல்லி அருகே நொய்டாவைச் சேர்ந்தவர் ராஜேஷ் தல்வார்  –   நூபுர் தல்வார் ஆகியோரின்   14 வயது மகள் ஆருஷி தல்வாரும், வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜும் என்பவரும் கடந்த 2008ம் ஆண்டு வீட்டில் மர்மமான முறையில் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்த இரட்டைக் கொலை வழக்கில், மாநில போலீசாரால் துப்பு துலக்க முடியாததால் வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. விசாரணையின் முடிவில் ஆருஷியின் பெற்றோரான ராஜேஷ் தல்வார், நூபுல் தல்வார் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்து அவர்களுக்கு    கடந்த 2013-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது.

தண்டனையை எதிர்த்து இருவரும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கின் அனைத்து தரப்பு சாட்சியங்களிடமும் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இவ்வழக்கில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More