Home உலகம் சீன அதிகாரிகள் – அரசியல்வாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தடையுத்தரவு

சீன அதிகாரிகள் – அரசியல்வாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தடையுத்தரவு

by admin


சீனாவில் உள்ள ஷின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்கள் என  குற்றம்சாட்டும் சீன அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக சில தடையுத்தரவுகளை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

வீகர் முஸ்லிம்கள் மற்றும் பிற அமைப்பினருக்கு எதிராக பெரும் அளவிலான தடுப்புக்காவல்கள், மத ரீதியிலான துன்புறுத்தல் மற்றும் கட்டாய கருத்தடை ஆகியவை மேற்கொள்ளப்பட்டதாக சீனா மீது குற்றம் சுமத்தப்படுகின்றது.

அமெரிக்காவை மையமாக கொண்டு நிதி முதலீடு செய்யப்பட்டுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பிராந்திய தலைவரான சென் குவாங்வோ மற்றும் மூன்று அதிகாரிகளுக்கு சொந்தமான சொத்துக்களை அமெரிக்கா அறிவித்துள்ள இந்த தடையுத்தரவு இலக்கு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை ஷின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம்கள் தவறாக நடத்தப்படவில்லை என தெரிவித்துள்ள சீனா எந்தவொரு மதமோ இனவாத குழுவோ இலக்கு வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுவனை மறுத்துள்ளது.

அண்மை காலமாக மறுகல்வி முகாம்களில் பல லட்சம் மக்களை சீன அதிகாரிகள் தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்படும் நிலையில் தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை தடுக்க அவர்களுக்கு தொழில்முறை பயிற்சி தேவைப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பலம்பொருந்திய பொலிட்பிரோவை சேர்ந்த சென் தான் அமெரிக்கா அறிவித்துள்ள இந்த தடையுத்தரவுகளால் கடுமையாக பாதிக்கப்படவுள்ள மிக உயரிய சீன அதிகாரி ஆவார். இவர் சிறுபான்மையினருக்கு எதிரான சீனாவின் கொள்கைகளுக்கு பின்னால் உள்ள முக்கியப் புள்ளியாக பார்க்கப்படுகிறார்.

ஷின்ஜியாங் மாகாணத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு அலுவலகத்தின் இயக்குநரான வாங் மிங்சான், ஷின்ஜியாங் பிராந்தியத்தை சேர்ந்த மூத்த கட்சி உறுப்பினரான ஜூ ஹாய்லூன் மற்றும் பாதுகாப்புதுறையின் முன்னாள் அதிகாரியான {ஹவோ ஆகியோரும் இந்த புதிய தடையுத்தரவுகளுக்கு இலக்காகியுள்ளனர்.

இவர்கள் அமெரிக்காவில் நிதி பரிவர்த்தனை செய்வது இனி அங்கு குற்றமாகும் என்பதுடன் இவர்களது அமெரிக்காவை மையமாக கொண்ட முதலீடுகள், சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஷின்ஜியாங் மாகாணத்தில் நடந்த கொடூரமான உரிமை மீறல்களுக்கு எதிராக அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுதுறை செயலர் மைக் பாம்பேயோ ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் மனிதாபிமானமற்ற இவ்வாறான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உலக நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து நிற்கவேண்டும் எனவும் மைக் பாம்பேயோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். #சீனா #அமெரிக்கா #தடையுத்தரவு #வீகர்முஸ்லிம்கள் #தடுப்புக்காவல்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More