Home இந்தியா சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி

சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி

by admin

தெலங்கானாவில் கனமழை காரணமாக சுவர் ஒன்று இடிந்து 10 வீடுகள் மீது விழுந்ததினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளதாக தொிவிக்கப்பட்டு்ள்ளது.

தெலங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும், ஆந்திராவின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முதல் கனமழை பெய்து வருவதனால் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தெலங்கானாவின் 14 மாநிலங்கள் கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் கனமழையினால் 12 பேர் பலியாகியுள்ளனர்.


இந்தநிலையில் அம்மாநிலத்தின் ரங்கா ரெட்டி மாவட்டம் பெண்ட்லகுடா நகரத்தில் உள்ள முகமதியா ஹில்ஸ் பகுதியில் பெய்த கனமழை காரணமாக நேற்று இரவு அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டின் மீது சுவர் இடிந்து விழுந்ததனால், வீட்டின் அருகில் உள்ள வீடுகளில் தங்கியிருந்தவர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் 2 மாத குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளதுடன் மீட்கப்பட்ட பலரின் உடல்நிலைகவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது. #தெலங்கானா #கனமழை #சுவர் #குழந்தை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More