Home இலங்கை ஜகத் ஜயசூரிய ஜோசப் முகாம் எனும் சித்திரவதை கூடமொன்றை நடத்தியுள்ளாா்

ஜகத் ஜயசூரிய ஜோசப் முகாம் எனும் சித்திரவதை கூடமொன்றை நடத்தியுள்ளாா்

by admin


இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய சித்திரவதை கூடமொன்றை நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. யுத்த நிறைவுப் பகுதியில் இராணுவ முகாமொன்றில் சித்திரவதைக் கூடமொன்றை பேணி வந்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜகத் ஜயசூரிய வன்னிக் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய காலத்தில் இவ்வாறு சித்திரவதைக் கூடமொன்றை நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இந்த முகாம் பேணப்பட்டு வந்தது எனவும் இந்த முகாமின் பெயர் ஜோசப் முகாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் ,  இந்த முகாமில் சித்திரவதைகள் நாளாந்தம் நடைபெற்றதனை தாம் அறியவில்லை என ஜகத் ஜயசூரிய கூற முடியாது என தெரிவித்துள்ளது.

மிகவும் மோசமான முறையில் கைதிகள் சித்திரவதைக்கு உட்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யாஸ்மீன் சூகா  கைதிகள் ஒலமிடும் சத்தம் ஜகத் ஜயசூரியவிற்கு கேட்காமல் இருந்திருக்க வாய்ப்பில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெனரல் ஜகத் ஜயசூரிய தற்போது பிரேஸிலுக்கான இலங்கை தூதுவராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More