Home இலங்கை தமிழர் விடுதலைக் கூட்டணி கிளிநொச்சியில் கட்டுப்பணம் செலுத்தியது

தமிழர் விடுதலைக் கூட்டணி கிளிநொச்சியில் கட்டுப்பணம் செலுத்தியது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமிழர் விடுதலைக் கூட்டணி இன்று 15.12.2017 வெள்ளிக்கிழமை , முற்கபகல் கிளிநொச்சியில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனா்.

கிளிநொச்சி மாவட்ட தேர்தல் செயலகத்தில் பொதுச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு சார்பாக தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தலைமையில் கரைச்சி,பூநகரி ,பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான கட்டுப் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஊடகங்களிற்கு அவர் கருத்து தெரிவிக்கையில், எமது கூட்டணியானது இம் முறை களமிறங்குவது தொடர்பில் மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு உள்ளது கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு எம்மால் பெற்றுக் கொடுக்கக் கூடிய நிலையில் இருந்த தீர்வுகளை விடுதலைப் புலிகள் கூட ஏற்றுக் கொண்ட நிலையில் சிலர் தமது அரசியல் அபிலாசைகளுக்காக துரோகத்தனமான வேலைகளை செய்திருந்தனர் அவர்களைப் போல் கதிரைக்காக அடிபடுபவர்கள் அல்ல துரோக வேலைகளை நாமும் செய்திருந்தால் நாம் இப்பொழுதும் கதிரையிலையே இருந்திருப்போம் எனக்கு நன்றாக வயது சென்று விட்டது நான் இறப்பதற்கு முன்னர் எனக்கு நடந்த துரோகங்களுக்கு சவாலாக எமது மக்களுக்கு சிறந்த தீர்வொன்றை பெற்றுக் கொடுத்து விட்டே இறப்பேன் எனவும் தெரிவித்தார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More