Home இலங்கை தாமதமாக கடிதம் கிடைத்த விளையாட்டு பயிலுன விண்ணப்பதாரிகள் தமது கடித்துடன் நேர்முக பரீட்சைக்கு சமூகமளிக்கலாம்

தாமதமாக கடிதம் கிடைத்த விளையாட்டு பயிலுன விண்ணப்பதாரிகள் தமது கடித்துடன் நேர்முக பரீட்சைக்கு சமூகமளிக்கலாம்

by admin

கல்வி அமைச்சினால் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட இருக்கும் 3850 விளையாட்டு பயிலுனர்களுக்கு தற்போது நேர்முக பரீட்சை கல்வி அமைச்சில் நடைபெற்று வருகின்றது.  இவ்வாறான நிலையில் இதற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளுக்கு நேர்முக பரீட்சை தினத்திற்கு பின்னர் கடிதங்கள் கிடைக்க பெற்றுள்ளதாக எங்களுக்கு முறைபாடுகள் கிடைக்க பெற்றுள்ளன.

இதனால் இவர்களுக்கு கடித்தில் குறிப்பிட்டிருந்த ஆவணங்களுடன் சழூகம் தர முடியாமல் போயும் உள்ளது. இவ்வாறு பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு 08.09.2017 அன்று காலை 9.00 மணிக்கு நடைபெரும் நேர்முக பரீடசைக்கு கலந்துக் கொள்ள முடியும் என   கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்  தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மலையகம் உட்பட வடக்கு மற்றும் கிழக்கு கஸ்ட பகுதி விண்ணப்பதாரிகளுக்கு கடிதங்கள் உரிய நேரத்தில் கிடைக்கவில்லை. காரணம் தபால் வினியோகத்தில் ஏற்பட்ட தாமதமும் அதி கஸ்ட்ட பிரசேங்கள் என்பதால் ஆகும்.

எனவே இவர்களுக்கும் உரிய சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்பதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே இச் சந்தர்பத்தை விண்ணப்பதாரிகள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளவும். மீண்டும் ஒரு தினம் வழங்கபடமாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More