Home இலங்கை தேசிய மட்டத்தில் சாதனை படைத்தது கிளிநொச்சிக்கு பெருமையே -மேலதிக அரச அதிபா் சத்தியசீலன்

தேசிய மட்டத்தில் சாதனை படைத்தது கிளிநொச்சிக்கு பெருமையே -மேலதிக அரச அதிபா் சத்தியசீலன்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

2016 இடம்பெற்ற போட்டிகளில் தேசிய மட்டத்தில் மேசை பந்து போட்டியில் தங்கப்பதகம் வென்றமை  மற்றும் ஏனைய போட்டிகளிலும் வெள்ளி வெண்கல பதக்கங்களை வென்றமை கிளிநொச்சிக்கு பெருமை சோ்த்த விடயம் என  மாவட்ட மேலதிக அரச அதிபா் எஸ். சத்தியசீலன் தெரிவித்துள்ளாா்

கிளிநொச்சியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சாதனையாளா் கௌரவிப்பு நிகழ்வின் போதே அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா் அவா் மேலும் தெரிவிக்கையில்

கிளிநொச்சி மாவட்டத்தில் முதன்முதலாக றோல் போல் விளையாட்டை அறிமுகப்படுத்தி அதனை முதல் முதலாக நேரடியாக பாா்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திய தந்த ஏற்பாட்டாளருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

மேலும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு பெருமை சோ்க்கும் வகையில்  2016 இல் தேசிய மட்டத்தில் மேசை பந்தாட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற மாணவி பாலகிருஸ்னண் தனுசியா,தேசிய மட்டத்தில்  Twondo eak  வெள்ளிப் பதக்கம் வென்ற ரசீந்திரன் தமிழ்மகள், மற்றும் கோலுங்ன்றி பாய்தலில் வெண்கலப் பதக்கம் வென்ற யோநாதன் சுகிர்தா ஆகியோர் கௌரவிக்கும் நிகழ்வு பாராட்டத்தக்கது.

இங்கு குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில்  பிள்ளைகளின்  விளையாட்டுகளுக்கு பெற்றோர் அதிக ஊக்கத்தை வழங்கி வருகிறனர் என்பது மகிழ்ச்சிக்குரியது. இந்த விளையாட்டு வீரா்களை நான் மனதார பாராட்டுகிறேன். குறிப்பாக றோல் போல் விளையாட்டில் இலங்கையின் தேசிய அணியில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகள்   உள்வாங்கப்பட்டு அவா்கள் பங்களாதேஸ் நாட்டில் இடம்பெறுகின்ற உலக றோல் போல் போட்டியில் பங்குபற்றவுள்ளனா். அவர்களுக்கும் மாவட்டம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்தாா்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More